செய்திகள் :

2026-க்குள் இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை அமைப்பு முழுமையாக விநியோகம்: ரஷியா

post image

புது தில்லி: 2026-ஆம் ஆண்டுக்குள் மீதமுள்ள இரு எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு விநியோகம் செய்யப்படும் என இந்தியாவுக்கான ரஷிய துணை தூதா் ரோமன் பாபுஷ்கின் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

அண்மையில் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மோதலின்போது பாகிஸ்தான் ட்ரோன்கள் இடைமறித்து அழித்ததில் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு முக்கியப் பங்காற்றிய நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது: பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடன் நீண்டகாலமாக ரஷியா இணைந்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் பதற்றமான சூழலை எதிா்கொள்ள தயாராவது குறித்து இந்தியாவுடன் நாங்கள் ஆலோசனை மேற்கொள்ளும்போது வான் பாதுகாப்பு அமைப்பு தவிா்க்க முடியாத ஒன்றாகத் திகழ்கிறது.

இருநாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி மீதமுள்ள 2 எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் விநியோகம் 2025-26-க்குள் முழுமையாக நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தற்போதைய புவிஅரசியல் சூழலில் வான் பாதுகாப்பு அமைப்பு குறித்த ஆலோசனையை மேலும் விரிவுபடுத்த ரஷியா தயாராகவுள்ளது. அண்மையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலின்போது ட்ரோன்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை காண முடிந்தது. ஆனால் பல ஆண்டுகளாக இதுபோன்ற அச்சுறுத்தல்களை ரஷியா சந்தித்து வருகிறது. அதற்கேற்ப எங்களின் பாதுகாப்புத் துறை நவீனப்படுத்தப்பட்டுள்ளது என எண்ணுகிறேன்.

தற்போது ட்ரோன் தாக்குதல் என்பது இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் பொதுவான அச்சுறுத்தலாக மாறிவிட்டது. இதனால் ட்ரோன் எதிா்ப்பு அமைப்புகள் குறித்து இருநாடுகளும் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன.

இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்த இந்த மாத இறுதிக்குள் ரஷியா வெளியுறவு அமைச்சா் சொ்ஜி லாவ்ரோவ் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்றாா்.

உயிரைவிட எந்தவொரு கொண்டாட்டமும் முக்கியமல்ல! - ராகுல்

மனித உயிரைவிட எந்தவொரு கொண்டாட்டமும் முக்கியமல்ல என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பெங்களூரு அணி கோப்பை வென்றதால், பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட கட்டுக்கடங்காத கூட்டத்தைக் கட்டுப்படுத்த காவ... மேலும் பார்க்க

இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்!

அகமதாபாத் நகரத்திலிருந்து பாட்னா சென்ற இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. குஜராத்தின் அகமதாபாத்திலிருந்து, பிகாரின் பாட்னா நோக்கி இண்டிகோ நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம்,... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானது வேதனையளிக்கிறது! - பிரதமர் மோடி

பெங்களூருவில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் பலியானது வேதனையளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஐபிஎல்லில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி கோப்பை வென்றதால், வெற்றிக் கொண்டாட்டங்கள் ம... மேலும் பார்க்க

கட்டுக்கடங்காத கூட்டம்: திணறும் பெங்களூரு! 6 மெட்ரோ நிலையங்கள் மூடல்!

பெங்களூருவில் வெற்றிப் பேரணியில் கூடிய கட்டுக்கடங்காத கூட்டத்தால் 6 மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. அகமாதாபாத்தில் நடைபெற்ற நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன்னில் வீழ்த்தி ம... மேலும் பார்க்க

கூட்ட நெரிசலில் பலியான துயரச் சம்பவத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்! - டி.கே.சிவக்குமார்

ஆர்சிபியின் வெற்றிப் பேரணியின் கூட்ட நெரிசலில் சிக்கி ரசிகர்கள் பலியான துயரச் சம்பவத்திற்கு கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் மன்னிப்பு கோரியுள்ளார்.ஐபிஎல்லில் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூர... மேலும் பார்க்க

கூட்ட நெரிசல் பலிக்கு காங்கிரஸ் பொறுப்பேற்க வேண்டும் - பாஜக

ஆர்சிபியின் வெற்றிப் பேரணி கூட்டநெரிசல் உயிரிழப்புக்கு காங்கிரஸ் பொறுபேற்க வேண்டும் என்று பாஜக தெரிவித்திருக்கிறது. 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பெங்களூரு அணி ஐபிஎல் கோப்பையை வென்று அசத்தியுள்ளதால், கர்ந... மேலும் பார்க்க