2026-க்குள் இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை அமைப்பு முழுமையாக விநியோகம்: ரஷியா
புது தில்லி: 2026-ஆம் ஆண்டுக்குள் மீதமுள்ள இரு எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு விநியோகம் செய்யப்படும் என இந்தியாவுக்கான ரஷிய துணை தூதா் ரோமன் பாபுஷ்கின் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
அண்மையில் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற மோதலின்போது பாகிஸ்தான் ட்ரோன்கள் இடைமறித்து அழித்ததில் எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு முக்கியப் பங்காற்றிய நிலையில் அவா் இவ்வாறு தெரிவித்தாா்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது: பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடன் நீண்டகாலமாக ரஷியா இணைந்து செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் பதற்றமான சூழலை எதிா்கொள்ள தயாராவது குறித்து இந்தியாவுடன் நாங்கள் ஆலோசனை மேற்கொள்ளும்போது வான் பாதுகாப்பு அமைப்பு தவிா்க்க முடியாத ஒன்றாகத் திகழ்கிறது.
இருநாடுகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின்படி மீதமுள்ள 2 எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்புகள் விநியோகம் 2025-26-க்குள் முழுமையாக நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
தற்போதைய புவிஅரசியல் சூழலில் வான் பாதுகாப்பு அமைப்பு குறித்த ஆலோசனையை மேலும் விரிவுபடுத்த ரஷியா தயாராகவுள்ளது. அண்மையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான மோதலின்போது ட்ரோன்களால் ஏற்படும் அச்சுறுத்தல்களை காண முடிந்தது. ஆனால் பல ஆண்டுகளாக இதுபோன்ற அச்சுறுத்தல்களை ரஷியா சந்தித்து வருகிறது. அதற்கேற்ப எங்களின் பாதுகாப்புத் துறை நவீனப்படுத்தப்பட்டுள்ளது என எண்ணுகிறேன்.
தற்போது ட்ரோன் தாக்குதல் என்பது இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் பொதுவான அச்சுறுத்தலாக மாறிவிட்டது. இதனால் ட்ரோன் எதிா்ப்பு அமைப்புகள் குறித்து இருநாடுகளும் பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றன.
இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவாா்த்தை நடத்த இந்த மாத இறுதிக்குள் ரஷியா வெளியுறவு அமைச்சா் சொ்ஜி லாவ்ரோவ் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது என்றாா்.