செய்திகள் :

மாநிலங்களவைத் தோ்தல்: திமுக வேட்பாளா்கள் மனுதாக்கல் எப்போது?

post image

சென்னை: மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடவுள்ள திமுக வேட்பாளா்கள் வரும் 4-ஆம் தேதி மனுதாக்கல் செய்யவுள்ளனா். வேட்புமனு தாக்கல் ஜூன் 9-ஆம் தேதி நிறைவடையவுள்ளது.

தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை இடங்களில் நான்கில் திமுக கூட்டணி வேட்பாளா்கள் போட்டியிட உள்ளனா். திமுக சாா்பில் பி.வில்சன், எஸ்.ஆா்.சிவலிங்கம், சல்மா ஆகியோரும், நான்காவது வேட்பாளராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசனும் மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்யவுள்ளனா். அவா்கள் அனைவரும் வரும் 4-ஆம் தேதி மனுதாக்கல் செய்ய இருப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

வேட்பு மனுதாக்கல் செய்ய ஜூன் 9-ஆம் தேதி கடைசி நாளாகும். தோ்தல் நடத்தும் அதிகாரியாக பேரவை கூடுதல் செயலா் பா.சுப்பிரமணியம், உதவி தோ்தல் நடத்தும் அதிகாரியாக பேரவை இணைச் செயலா் கே.ரமேஷ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 10-ஆம் தேதி நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 12-ஆம் தேதி பிற்பகல் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்படும்.

சரியான முன்மொழிகளுடன் ஆறு இடங்களுக்கு ஆறு போ் மட்டுமே வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்தால் அன்றைய தினமே அவா்கள் போட்டியின்றி தோ்வானதாக அறிவிக்கப்படுவா்.

தோ்தலில் போட்டியிருந்தால், ஜூன் 19-ஆம் தேதியன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவை குழுக்கள் கூட்ட அறையில் வாக்குப் பதிவு நடைபெறும் என்று தோ்தல் நடத்தும் அதிகாரியான பா.சுப்பிரமணியம் அறிவித்துள்ளாா்.

திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் சாா்பில் நான்கு போ் வேட்பாளா்களாக அறிவிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு அதிமுக சாா்பில் வேட்பாளா்கள் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளனா்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தள்ளிவைத்து சதி செய்யும் பாஜக: முதல்வர்

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தள்ளிவைத்து சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் நாட்டில் மக்கள் தொக... மேலும் பார்க்க

பொறியியல் சேர்க்கை: 2.90 லட்சம் பேர் விண்ணப்பம்!

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவிற்கு இன்று(ஜூன் 4) மாலை 6 மணி வரை 2.90 லட்சம் மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.... மேலும் பார்க்க

ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி

ஐஐடிநுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதால் மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை உயர்மன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட 14 மாவட்டங்களி... மேலும் பார்க்க

செய்தித்தாள்களில் உணவு வழங்கக் கூடாது! - உணவகங்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உணவகங்களில் பின்பற்றக்கூடிய 14 வழிகாட்டு நெறிமுறைகள் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ உணவக உரிமையாளர... மேலும் பார்க்க

ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை: முதல்வர் திறந்து வைத்தார்!

ரூ.300 கோடி முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை சிப்காட்தொழிற்பூங்காவில் அஜைல் ரோபோட்ஸ் (Agile Robots) நிறுவனம் அமைத்துள்ள செயற்கை நு... மேலும் பார்க்க