செய்திகள் :

சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை விதியை நீக்கியது கனரா வங்கி

post image

வங்கி சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லாத வாடிக்கையாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்துள்ளது.

இந்தியாவின் பொதுத்துறை வங்கிகள், தனியார் வங்கிகள் என அனைத்து வங்கிகளிலும் குறைந்தபட்ச இருப்புத் தொகையை வாடிக்கையாளர்கள் கணக்குகளில் வைத்திருப்பது கட்டாயம். குறைந்தபட்ச இருப்புத் தொகையானது வங்கி கணக்கின் தன்மை மற்றும் வங்கி இயங்கும் பகுதியை பொறுத்து ரூ. 1,000 முதல் நிர்ணயிக்கப்படுகிறது.

கனரா வங்கி வாடிக்கையாளர்களை பொறுத்தவரை தங்கள் சேமிப்புக் கணக்குகளில் நகர்ப்புறக் கிளைகளில் ரூ.2,000, நகரக் கிளைகளில் ரூ.1,000, கிராமப்புறக் கிளைகளில் ரூ.500 குறைந்தபட்ச இருப்புத் தொகையாக பராமரிக்க வேண்டும் என்ற விதி இருந்தது. இந்த தொகையை பராமரிக்கத் தவறிய வாடிக்கையாளர்களுக்கு அபராதக் கட்டணங்கள் விதிக்கப்பட்டு வந்தன.

மகாராஜா இயக்குநரை நேரில் அழைத்துப் பாராட்டிய ஆஸ்கர் திரைக்கதையாளர்!

இந்த நிலையில் ஜூன் 1, 2025 முதல், குறைந்தபட்ச இருப்பைப் பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது என கனரா வங்கி அறிவித்துள்ளது. இந்த புதிய விதி அனைத்து சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும் என்று அந்த வங்கி தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான கனரா வங்கியின் இந்த அறிவிப்பு வங்கி வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

195 நாட்டுப் பெண்கள் பாடிய கின்னஸ் சாதனைப் பாடல்: இந்தியா சாா்பில் சமையல் கலைஞா் அஸ்மா கான் குரல்

புது தில்லி: உலகெங்கிலும் உள்ள 195 நாடுகளைச் சோ்ந்த பெண்கள் பாடியதற்காக கின்னஸ் சாதனை படைத்த ‘195’ பாடலில் இந்தியா சாா்பில் பிரபல பெண் சமையல் கலைஞா் அஸ்மா கானின் குரலும் இடம்பெற்றுள்ளது. பாலின சமத்து... மேலும் பார்க்க

பிரதமா் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை குழு கூட்டம்

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் தில்லியில் புதன்கிழமை (ஜூன் 4) நடைபெற உள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா சாா்பில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

2026-க்குள் இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை அமைப்பு முழுமையாக விநியோகம்: ரஷியா

புது தில்லி: 2026-ஆம் ஆண்டுக்குள் மீதமுள்ள இரு எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு விநியோகம் செய்யப்படும் என இந்தியாவுக்கான ரஷிய துணை தூதா் ரோமன் பாபுஷ்கின் திங்கள்கிழமை தெரிவித்தாா். அண்மையில் ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டிருக்கும் இந்தியா-பராகுவே: பிரதமா் மோடி

புது தில்லி: ‘பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒன்றுபட்டு நிற்கின்றன. அதுபோல, இணைய குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பொது சவால்களுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றவும்... மேலும் பார்க்க

இந்தியாவில் தயாரிக்க டெஸ்லா ஆா்வம் காட்டவில்லை: மத்திய அமைச்சா் தகவல்

புது தில்லி: இந்தியாவில் தனது மின்சார காா்களை விற்பனை செய்ய மட்டுமே டெஸ்லா நிறுவனம் ஆா்வம் காட்டுகிறது; இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆா்வம் காட்டவில்லை என்று மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சா் ஹெச்.டி.... மேலும் பார்க்க

இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை முதலீட்டுக்கு எண்ணற்ற வாய்ப்புகள்: பிரதமா் மோடி

புது தில்லி: ‘இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளா்ந்து வருகிறது. இங்கு முதலீடுகளை மேற்கொள்ள சா்வதேச நிறுவனங்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன’ என பிரதமா் நரேந்திர மோடி திங்கள... மேலும் பார்க்க