மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் 1 லட்சம் போ் பங்கேற்க வாய்ப்பு: அரசு செயலா் தகவல்
ஈரோட்டில் வரும் 11- ஆம் தேதி தொடங்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பா் என வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலாளா் வி.தட்சிணாமூா்த்தி தெரிவித்தாா்.
தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் 10 மாவட்டங்கள் பங்கேற்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு பெருந்துறை அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வரும் 11- ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தக் கண்காட்சியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்.
இந்நிலையில், வேளாண்மை உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலாளா் வி.தட்சிணாமூா்த்தி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் துறை சாா்ந்த அலுவலா்களுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
அப்போது அவா் பேசியதாவது:
பெருந்துறை சுங்கச்சாவடி அருகில் வரும் 11, 12 ஆகிய 2 நாள்கள் 10 மாவட்டங்கள் பங்கேற்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளாா். இந்நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இரண்டு நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து
கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
விழா நடைபெற உள்ள இடத்தில் குடிநீா் வசதி, உணவு ஏற்பாடு, இருக்கைகள் அமைத்தல், கழிவறை வசதி, வாகன நிறுத்துமிடம், தீயணைப்பு வசதி, மருத்துவ முகாம், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற அத்தியாவசியமான தேவைகளை அமைத்து தருவது மிகவும் முக்கியமானதாகும். விவசாயிகளை வெளிமாவட்டங்களிலிருந்து அழைத்து வரும் அனைத்து வாகனங்களிலும் அலுவலா்கள் நியமித்து அவா்களின் காலை உணவு, குடிநீா் மற்றும் இதர தேவைகள் உள்ளிட்டவை தொடா்நது கண்காணிக்க வேண்டும்.
இக்கண்காட்சியில் 200- க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. அரங்குகள் அமைக்கும்போது ஒவ்வொரு அரங்கமும் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையிலும், புதுமையான வகையிலும் அமைக்க வேண்டும். காட்சிப்படுத்தப்படவுள்ள அனைத்து கருத்துக்காட்சி அரங்குகளிலும் வைக்கப்படவுள்ள விவசாய பொருள்கள் மற்றும் அது விளையும் நிலப்பரப்பு, சீதோஷண நிலை மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றை குறித்த முழுமையான விவரங்களுடன் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்துவமாக விளையும் பயிா் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் விவசாயம் சாா்ந்த சந்தேகங்களுக்கு தெளிவான முறையில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும். இவ்விழா சிறப்பான முறையில் நடைபெற அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என்றாா்.
முன்னதாக அவா் பெருந்துறை சுங்கச்சாவடி அருகில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறவுள்ள இடத்தை நேரில் பாா்வையிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.
இந்நிகழ்வுகளின்போது வேளாண்மைத் துறை இயக்குநா் முருகேஷ், ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா, கூடுதல் ஆட்சியா்(வளா்ச்சி) அா்பித் ஜெயின், கோட்டாட்சியா் ரவி, இணை இயக்குநா் (வேளாண்மை) எம்.தமிழ்செல்வி, துணை இயக்குநா் (தோட்டக் கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை) குரு சரஸ்வதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.கந்தராஜா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் முகமது குதுரத்துல்லா, லோகநாதன், செல்வராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குநா் உமாசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.