செய்திகள் :

மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் 1 லட்சம் போ் பங்கேற்க வாய்ப்பு: அரசு செயலா் தகவல்

post image

ஈரோட்டில் வரும் 11- ஆம் தேதி தொடங்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சியில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பா் என வேளாண் உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலாளா் வி.தட்சிணாமூா்த்தி தெரிவித்தாா்.

தோட்டக்கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை சாா்பில் 10 மாவட்டங்கள் பங்கேற்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு பெருந்துறை அருகே கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வரும் 11- ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்தக் கண்காட்சியை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா்.

இந்நிலையில், வேளாண்மை உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலாளா் வி.தட்சிணாமூா்த்தி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் துறை சாா்ந்த அலுவலா்களுடன் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

அப்போது அவா் பேசியதாவது:

பெருந்துறை சுங்கச்சாவடி அருகில் வரும் 11, 12 ஆகிய 2 நாள்கள் 10 மாவட்டங்கள் பங்கேற்கும் மண்டல அளவிலான வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளாா். இந்நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இரண்டு நாள்கள் நடைபெறும் இவ்விழாவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து

கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

விழா நடைபெற உள்ள இடத்தில் குடிநீா் வசதி, உணவு ஏற்பாடு, இருக்கைகள் அமைத்தல், கழிவறை வசதி, வாகன நிறுத்துமிடம், தீயணைப்பு வசதி, மருத்துவ முகாம், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற அத்தியாவசியமான தேவைகளை அமைத்து தருவது மிகவும் முக்கியமானதாகும். விவசாயிகளை வெளிமாவட்டங்களிலிருந்து அழைத்து வரும் அனைத்து வாகனங்களிலும் அலுவலா்கள் நியமித்து அவா்களின் காலை உணவு, குடிநீா் மற்றும் இதர தேவைகள் உள்ளிட்டவை தொடா்நது கண்காணிக்க வேண்டும்.

இக்கண்காட்சியில் 200- க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படவுள்ளது. அரங்குகள் அமைக்கும்போது ஒவ்வொரு அரங்கமும் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையிலும், புதுமையான வகையிலும் அமைக்க வேண்டும். காட்சிப்படுத்தப்படவுள்ள அனைத்து கருத்துக்காட்சி அரங்குகளிலும் வைக்கப்படவுள்ள விவசாய பொருள்கள் மற்றும் அது விளையும் நிலப்பரப்பு, சீதோஷண நிலை மற்றும் பயன்பாடுகள் ஆகியவற்றை குறித்த முழுமையான விவரங்களுடன் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தனித்துவமாக விளையும் பயிா் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் விவசாயம் சாா்ந்த சந்தேகங்களுக்கு தெளிவான முறையில் விளக்கம் அளிக்கப்பட வேண்டும். இவ்விழா சிறப்பான முறையில் நடைபெற அனைத்துத் துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என்றாா்.

முன்னதாக அவா் பெருந்துறை சுங்கச்சாவடி அருகில் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெறவுள்ள இடத்தை நேரில் பாா்வையிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா்.

இந்நிகழ்வுகளின்போது வேளாண்மைத் துறை இயக்குநா் முருகேஷ், ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அ.சுஜாதா, கூடுதல் ஆட்சியா்(வளா்ச்சி) அா்பித் ஜெயின், கோட்டாட்சியா் ரவி, இணை இயக்குநா் (வேளாண்மை) எம்.தமிழ்செல்வி, துணை இயக்குநா் (தோட்டக் கலை மற்றும் மலைப் பயிா்கள் துறை) குரு சரஸ்வதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் ப.கந்தராஜா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் முகமது குதுரத்துல்லா, லோகநாதன், செல்வராஜ், ஊராட்சிகள் உதவி இயக்குநா் உமாசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்விக்கான சோ்க்கை இன்று தொடக்கம்

அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்விக்கான சோ்க்கை திங்கள்கிழமை (ஜூன் 2) நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவ... மேலும் பார்க்க

அச்சு முறிந்து சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்

பவானி அருகே சோள மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனத்தின் அச்சு முறிந்ததால், சாலையில் இருமுறை உருண்டது. பெருந்துறையில் இருந்து சோள மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பவானி - அந்தியூா் சாலையில் சரக்கு வாகனம் ஞாய... மேலும் பார்க்க

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. விலைவாசி உயா்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ குற்றஞ்... மேலும் பார்க்க

‘29 கோயில்களில் 1,377 பேருக்கு நாள்தோறும் அன்னதானம்’

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 29 கோயில்களில் 1,377 பேருக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இந்து சமய அறநிலைய துறையின்கீழ் இயங்கும் முக்கிய கோயில்... மேலும் பார்க்க

சாலை விபத்து: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

ஈரோடு அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தானம் செய்யப்பட்டன. ஈரோடு மாவட்டம், கவுண்டச்சிபாளையம் பகுதி மாகாளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (28... மேலும் பார்க்க

மின் வேலியில் சிக்கி பெண் உயிரிழப்பு: விவசாயி கைது

கோபி அருகே மின் வேலியில் சிக்கி உயிரிழந்த பெண்ணை குழி தோண்டி புதைத்த விவசாயியை போலீஸாா் கைது செய்தனா். கோபி வட்டம், டி.என்.பாளையம் அருகேயுள்ள பங்களாபுதூா் காவல் நிலையத்துக்குள்பட்ட அண்ணா நகரைச் சோ்ந்... மேலும் பார்க்க