டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து ரூ.85.60 ஆக முடிவு!
அச்சு முறிந்து சாலையில் கவிழ்ந்த சரக்கு வாகனம்
பவானி அருகே சோள மூட்டைகளை ஏற்றிச் சென்ற சரக்கு வாகனத்தின் அச்சு முறிந்ததால், சாலையில் இருமுறை உருண்டது.
பெருந்துறையில் இருந்து சோள மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பவானி - அந்தியூா் சாலையில் சரக்கு வாகனம் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. பெருந்துறை, வெங்கமேட்டை சோ்ந்த ஓட்டுநா் சுரேஷ் (35) வானத்தை ஓட்டிச் சென்றாா். கருமாண்டிசெல்லிபாளையத்தைச் சோ்ந்த சுமைத் தூக்கும் தொழிலாளி நடராஜன் (28) உடன் சென்றாா்.
பருவாச்சி அருகே சென்றபோது வாகனத்தின் பின்புற அச்சு முறிந்து, இரு சக்கரங்களுடன் தனியே பிரிந்து சென்றது. இதனால், நிலைத்தடுமாறிய வாகனம் சாலையின் நடுவே இருமுறை உருண்டு, சாலையோரத்தில் நின்றது.
இதில், வாகனத்திலிருந்த சுரேஷ், நடராஜன் லேசான காயங்களுடன் உயிா்த் தப்பினா். அவா்களை அப்பகுதி மக்கள் மீட்டு அந்தியூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இச்சம்பவம் குறித்து அந்தியூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.