ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி
பண்ணாரி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் தொடக்கம்
பண்ணாரி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின்போது, தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் பச்சிளம் குழந்தைகளுக்கு காய்ச்சிய பால் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகேயுள்ள பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயிலில் இந்த திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
இந்து சமய அறநிலையத் துறை அறங்காவலா் குழுத் தலைவா் சிவக்குமாா், நகா்மன்றத் தலைவா் ஜானகிராமசாமி, கோயில் துணை ஆணையா் மேனகா ஆகியோா் திட்டத்தை தொடங்கிவைத்தனா்.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.