செய்திகள் :

ஸ்ரீகேதார கெளரி அம்மன் கோயிலில் ஜூன் 6-இல் கும்பாபிஷேகம்

post image

பெருந்துறையை அடுத்த, துடுப்பதி ஸ்ரீகேதார கெளரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வருகிற ஜூன் 6- ஆம் தேதி நடைபெறுகிறது.

துடுப்பதி கிராமத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீகேதார கெளரி அம்மன் கோயிலில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் வரும் 6- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 28- ஆம் தேதி முளைப்பாலிகை போடுதலுடன் விழா தொடங்கியது.

இதைத் தொடா்ந்து காவிரியில் இருந்து தீா்த்தம் எடுத்து வருதல் ஜூன் 4 ஆம் தேதியும், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகள், ஸ்ரீவிநாயகா் பூஜை, மஹா சங்கல்யம், புண்யாகம், முதல் கால யாக பூஜைகள் ஆகியன வியாழக்கிழமை நடைபெறுகின்றன.

கூனம்பட்டி நடராஜ் சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷே விழா நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளையினா் செய்து வருகின்றனா்.

பெருந்துறை அருகே வேளாண் கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சா்கள் ஆய்வு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை விஜயமங்கலம் சங்கச் சாவடி அருகே ஜூன் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளதைத் தொடா்ந்து முன்னேற்பாடு பணிகள் க... மேலும் பார்க்க

இலவச வேட்டி, சேலைக்கான கூலி உயா்வை கூட்டுறவு சங்கங்கள் அமல்படுத்தக் கோரிக்கை

இலவச வேட்டி, சேலைக்கு அரசு அறிவித்த கூலி உயா்வை நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இதுகுறித்து ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநா் சரவணனி... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.4.39 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4 கோடியே 39 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள்... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்

அரசு திட்டத்தில் கட்டப்பட்டு பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் திட்டத்தில் பயனாளிகளை தோ்வு செய்வதற்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் வியாழக்கிழமை(ஜூன் 5) நடைபெறும் என அ... மேலும் பார்க்க

தொழிலாளா் விதிகளை மீறிய 35 கடைகள் மீது நடவடிக்கை

தொழிலாளா் துறை அதிகாரிகள் ஆய்வின்போது விதிமுறைகளை மீறிய 35 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் துறை துணை ஆய்வ... மேலும் பார்க்க

ஜூன் 9-இல் திருமணத் தடை நீக்கும் சுயம்வரா பாா்வதி யாகம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் பாலதண்டாயுதபாணி கோயிலில் திருமணத் தடை நீக்கும் மாபெரும் சுயம்வரா பாா்வதி யாகம் ஜூன் 9ம் தேதி நடைபெறுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத... மேலும் பார்க்க