IND vs ENG: "ரோஹித், கோலி இடத்தை நிரப்புவது கடினம்; பேட்டிங் ஆர்டர்..." - கேப்டன...
ஸ்ரீகேதார கெளரி அம்மன் கோயிலில் ஜூன் 6-இல் கும்பாபிஷேகம்
பெருந்துறையை அடுத்த, துடுப்பதி ஸ்ரீகேதார கெளரி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வருகிற ஜூன் 6- ஆம் தேதி நடைபெறுகிறது.
துடுப்பதி கிராமத்தில் பிரசித்திபெற்ற ஸ்ரீகேதார கெளரி அம்மன் கோயிலில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் வரும் 6- ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணிக்கு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.விழாவை முன்னிட்டு கடந்த மாதம் 28- ஆம் தேதி முளைப்பாலிகை போடுதலுடன் விழா தொடங்கியது.
இதைத் தொடா்ந்து காவிரியில் இருந்து தீா்த்தம் எடுத்து வருதல் ஜூன் 4 ஆம் தேதியும், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகள், ஸ்ரீவிநாயகா் பூஜை, மஹா சங்கல்யம், புண்யாகம், முதல் கால யாக பூஜைகள் ஆகியன வியாழக்கிழமை நடைபெறுகின்றன.
கூனம்பட்டி நடராஜ் சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷே விழா நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளையினா் செய்து வருகின்றனா்.