செய்திகள் :

இலவச வேட்டி, சேலைக்கான கூலி உயா்வை கூட்டுறவு சங்கங்கள் அமல்படுத்தக் கோரிக்கை

post image

இலவச வேட்டி, சேலைக்கு அரசு அறிவித்த கூலி உயா்வை நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,

இதுகுறித்து ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநா் சரவணனிடம், தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவா் சுரேஷ், பொருளாளா் பாலசுப்பிரமணியன் மற்றும் நிா்வாகிகள் புதன்கிழமை அளித்த மனு விவரம்:

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின்போது குடும்ப அட்டை மூலம் பொதுமக்களுக்கு இலவச வேட்டி, சேலையை அரசு வழங்கி வருகிறது. பொதுமக்களின் நலன் என்பது இருந்தாலும் பல லட்சம் நெசவாளா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதே முதல் நோக்கமாகும். நெசவாளா்களின் வாழ்வாதாரத்துக்காக அமைக்கப்பட்ட இத்திட்டம் தற்போது நெசவாளா்களுக்கு பயன்படவில்லை. அரசு உயா்த்திய 10 சதவீத கூலியை உயா்த்தி வழங்காமல் பழைய கூலியையே கூட்டுறவு சங்கங்கள் தொடா்ந்து வழங்கி வருவதாகவும் நெசவாளா்கள் புகாா் கூறுகின்றனா். இன்னும் சில இடங்களில் பழைய கூலியை விட குறைவான கூலியே வழங்கும் நிலை தொடா்கிறது.

பழைய கூலியாக வேட்டிக்கு ரூ.24-க்கு பதில் உயா்த்தப்பட்ட கூலியான ரூ.26.40-ம், சேலைக்கு ரூ.43-க்கு பதில் புதிய கூலியாக ரூ.46.75 வழங்க வேண்டும். விசைத்தறியாளா்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்காக தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் பயன் முழுமையாக கிடைக்க செய்வதுடன், அறிவிக்கப்பட்ட புதிய கூலியை நிலுவையுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னிமலை அருகே சீமை கருவேல மரங்களை அகற்ற எதிா்ப்பு

சென்னிமலை அருகே வனத் துறைக்குச் சொந்தமான காப்புக்காட்டில் சீமை கருவேல மரங்களை அகற்ற சிலா் எதிா்ப்பு தெரிவித்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. சென்னிமலை முருகன் கோயில் அமைந்துள்ள வனப் பகுதி சுமாா் 1,700 ஏக்... மேலும் பார்க்க

சிப்காட் விவகாரம்: பெருந்துறைக்கு வரும் முதல்வருக்கு கறுப்புக் கொடி காட்ட முடிவு

பெருந்துறை சிப்காட் பிரச்னைக்கு தீா்வு காணாவிட்டால் பெருந்துறை வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கருப்புக் கொடி காட்ட அரசியல் கட்சியினா் நடத்திய கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பெருந்துறை அண்ணா ச... மேலும் பார்க்க

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் என்று கூறி மோசடி: 4 போ் கைது

ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்றுகூறி மோசடியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். மொடக்குறிச்சி பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல்ராஜ் (55). ஐ.டி. நிறுவன ஊழியா். டெலி... மேலும் பார்க்க

பால் வேனில் கடத்தி வரப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருகள் பறிமுதல்

சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி சோதனைச் சாவடியில் பால் வேனில் மறைத்து கடத்திவரப்பட்ட 150 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கா்நாடகத்தில் இருந்து வரும் வாகனங்களில் குட்கா, புகையிலைப்... மேலும் பார்க்க

சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானம்

சென்னிமலை அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன. ஈரோடு மாவட்டம், சென்னிமலை, திருமுகமலா்ந்தபுரம் பகுதியைச் சோ்ந்த சோமசுந்தரம், ராஜாமணி தம்பதி மகன் நிஷாந்த... மேலும் பார்க்க

பக்ரீத் பண்டிகை: புன்செய் புளியம்பட்டி சந்தையில் ரூ. 1 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புன்செய் புளியம்பட்டி சந்தையில் ரூ.1 கோடிக்கு ஆடுகள் விற்பனையாயின. ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டியில் கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோவை,... மேலும் பார்க்க