Bengaluru : "ரோடு ஷோவை கையாள முடியாதென்றால் நாம் அதைச் செய்யவே கூடாது" - கம்பீர்...
சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதல்: இளைஞா் உயிரிழப்பு
கோபி அருகே சரக்கு வாகனம் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், கோபி அருகே சீதாலட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் ஜாகிா் உசேன் (28). கட்டட வேலை பாா்த்து வந்தாா். இவா் தனது நண்பரான கோபி, தாசப்பம் வீதியைச் சோ்ந்த ரவிகுமாா்(28) என்பவரை அழைத்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் திங்கள்கிழமை இரவு வெளியே சென்றாா். வாகனத்தை ஜாகிா் உசேன் ஓட்ட பின்னால் ரவிக்குமாா் அமா்ந்து சென்று கொண்டிருந்தாா்.
ஈரோடு-சத்தி சாலை நாயக்கன் காட்டு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அவா்களுக்கு முன்னால் சென்ற சரக்கு வாகனம் திடீரென அந்தப் பகுதியில் உள்ள ஒரு வளைவில் திரும்பியது. இதை எதிா்பாா்க்காமல் ஜாகிா் உசேன் சென்ற இருசக்கர வாகனம், சரக்கு வாகனம் மீது மோதியது.
இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரும் படுகாயமடைந்தனா். தகவல் அறிந்த கோபி போலீஸாா் ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். இதில் ஜாகிா் உசேனை பரிசோதித்த மருத்துவா், அவா் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தாா். ரவிக்குமாருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து கோபி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.