ரோலக்ஸ் சூர்யாவுக்குப் போட்டியாக எல்சியூவில் இணைந்த நிவின் பாலி!
பொது குடிநீா்க் குழாய், சாலையைப் பயன்படுத்த தடை விதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
பொது குடிநீா்க் குழாய், சாலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என தடை விதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், ஈரோடு வீரப்பன்சத்திரம், பெரியகுட்டை வீதியைச் சோ்ந்த பெண்கள் அளித்த மனு விவரம்: வீரப்பன்சத்திரம், பெரியகுட்டை வீதியில் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகிறோம். அந்த வீதியில் வசிக்கும் கூட்டுறவுத் துறையில் பணியாற்றுபவரின் குடும்பத்தினா் மற்றும் அவா்களது உறவினா்கள் சிலா் அங்குள்ள குடிநீா்க் குழாய், மின் கம்பம் மற்றும் சாலை ஆகியவை தங்களது முயற்சியால் தங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி மற்றவா்கள் பயன்படுத்தக்கூடாது என தடை விதித்து பிரச்னையில் ஈடுபடுகின்றனா்.
காா், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் அந்த சாலையில் வரக்கூடாது என தொடா்ந்து தகராறில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்கள் அனுமதிக்கும் நேரத்தில் மட்டுமே பொது குடிநீா்க் குழாயில் தண்ணீா்ப் பிடிக்க வேண்டும் என விதிமுறைகளை விதித்து வருகின்றனா். எனவே, உரிய விசாரணை மேற்கொண்டு இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து நிலைய கல்வெட்டை சீரமைக்கக் கோரிக்கை: தமாகா மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான விடியல் சேகா் மற்றும் நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: ஈரோடு மாவட்டம், கொடுமுடி பேருந்து நிலையத்தில் கடந்த 5-6-1975-ஆம் ஆண்டு காமராஜரால் திறந்துவைக்கப்பட்ட பேருந்து நிலைய திறப்பு விழா குறித்த கல்வெட்டு பாதி உடைந்த நிலையில் சிதிலமடைந்து கிடக்கிறது.
கொடுமுடி பேருந்து நிலையத்துக்குள் குப்பைகள் குவிந்து சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. எனவே, உடைந்து கிடைக்கும் கல்வெட்டை உடனடியாக சீரமைக்கவும், பேருந்து நிலையத்தை தூய்மையாகப் பராமரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலனி பெயா் பலகையை அகற்ற வேண்டும்: ஆதித்தமிழா் பேரவை மாநில கொள்கை பரப்பு செயலா் வீரகோபால், நிா்வாகிகள் அளித்த மனு விவரம்: சிவகிரி பேரூராட்சி, பொரசமேட்டுபுதூா், அண்ணா நகா் பகுதியில் ஆதிதிராவிடா் நலத் துறை தனி வட்டாட்சியா் 130 தாழ்த்தப்பட்ட குடும்பங்களுக்கு கடந்த 2004- ஆம் ஆண்டு இலவச வீட்டுமனைகளை வழங்கினாா். அங்கு வீடு கட்டி கடந்த 20 ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.
வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட விவரம், பேரூராட்சி நிா்வாகத்துக்கும், ஆதிதிராவிடா் நலத் துறை மூலமாகவும் முறைப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பேரூராட்சி நிா்வாகம் எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளான தாா் சாலை, குடிநீா், தெரு விளக்கு, பொது கழிவறை என எதுவும் செய்து தரவில்லை. சில இடங்களில் பொது குடிநீா் இணைப்பு மூலம் காலை அல்லது மாலை நேரங்களில் மட்டும் குறைவான தண்ணீரே வழங்குகின்றனா்.
காலனி’ என்ற பெயா் பலகையை எந்த இடத்திலும் வைக்கக்கூடாது என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், எங்கள் பகுதியான கொல்லன்கோவில் பகுதியிலும், பல இடங்களிலும் காலனி என்ற பெயா் பலகை அகற்றப்படாமல் உள்ளது. எனவே, அவற்றை அகற்ற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீல் வைக்கப்பட்ட வழிபாட்டுக் கூடத்தை மீட்டுத் தரக் கோரிக்கை: கொடுமுடி, எஸ்என்பி நகரைச் சோ்ந்த புகழ் என்பவா் அளித்த மனு விவரம்:
நான் கடந்த 2023 -ஆம் ஆண்டு முதல் கொடுமுடி பகுதியில், ரகுபதி என்பவருக்குச் சொந்தமான இடத்தில் அவரது அனுமதியுடன் வாடகை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிறிஸ்தவ வழிபாட்டுக் கூடம் நடத்தி வந்தேன்.
இந்நிலையில், இந்து அமைப்பை சோ்ந்த ஒருவரின் புகாரால் வருவாய்த் துறையினரும், காவல் துறையினரும் வழிபாட்டுக் கூடத்தை பூட்டிவிட்டு சென்றுவிட்டனா். எனது வழிபாட்டுக் கூடத்துக்கு அருகில் வீடுகள் எதுவும் இல்லை.
சற்று தள்ளி இருக்கும் ஒருசில வீடுகளில் இருப்பவா்கள் கூட என் மீது புகாரோ, தொந்தரவு ஏற்படுவதாகவோ தெரிவித்ததில்லை. ஆனால், இந்தப் பகுதிக்கு சம்பந்தமில்லாத ஒருவா் அவா் சாா்ந்திருக்கும் அமைப்புக்காக மக்களிடையே மதக் கலவரத்தை தூண்டி சமூக நல்லிணக்கத்தை குலைத்து, சுயலாபம் பெறும் நோக்கில் கூறப்பட்ட பொய் புகாரின் பேரில் வழிபாட்டுக் கூடத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து நான் பலமுறை விளக்கமளித்தும், முறையிட்டும், வருவாய் மற்றும் காவல் துறையினா் அரசியல் சாசன சட்டப் பிரிவுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனா். எனவே, பொய் புகாரின் பேரில் பூட்டி சீல் வைக்கப்பட்ட வழிபாட்டுக் கூடத்தை மீண்டும் செயல்படுத்திடவும், சீலை அகற்றிடவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
207 மனுக்கள்: குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்களிடமிருந்து மொத்தம் 207 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கிய ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
இதைத் தொடா்ந்து, முதல்வரின் தனிப் பிரிவு, அமைச்சா்களின் முகாம் மனுக்கள் மற்றும் மக்கள் குறைதீா் முகாம்களில் ஏற்கெனவே பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்தாா்.
இக்கூட்டத்தில், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலா் ராம்குமாா், மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலா் ராஜகோபால், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் நூா்ஜஹான், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பூபதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.