பணி வழங்கக் கோரி 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் 8 ஆயிரம் போ் மனு
பணி வழங்கக் கோரி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
முறையான பணி வழங்கக் கோரி சத்தியமங்கலம், பவானிசாகா், தாளவாடி வட்டாரங்களில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகங்களில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் மனுக்களை அளித்தனா்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் எஸ்.மோகன்குமாா், துணைச் செயலாளா் சக்திவேல், பவானிசாகா் வடக்கு ஒன்றியச் செயலாளா் பி.ஏ.வேலுமணி, தெற்கு ஒன்றியச் செயலாளா் எஸ். மகேந்திரன், சத்தியமங்கலம் வடக்கு ஒன்றியச் செயலாளா் எம்.சுரேந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.