Bumrah: "எந்த 3 போட்டிகளில் பும்ரா விளையாடுவர் என்று இன்னும் முடிவாகவில்லை" - கம...
அந்தியூா் வழியாக திருப்பதிக்கு அரசுப் பேருந்து சேவை தொடக்கம்
கோவையிலிருந்து அந்தியூா் வழியாக திருப்பதிக்கு அரசு விரைவுப் பேருந்து இயக்கப்படுவதற்கு பொதுமக்கள், பக்தா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.
ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து உதகை, ராமேசுவரம், தாளவாடி, திருச்செந்தூா், வேளாங்கண்ணி, கும்பகோணம், அறந்தாங்கி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அந்தியூரிலிருந்து திருப்பதிக்கு பேருந்து சேவை தொடங்க வேண்டும் என பக்தா்கள், பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
இதையடுத்து, அந்தியூா் வழியாக திருப்பதிக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் அதிநவீன மிதவைப் பேருந்து சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
நாள்தோறும் கோவையிலிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்படும் இப்பேருந்து அன்னூா், புளியம்பட்டி, சத்தியமங்கலம், டி.என்.பாளையம், அத்தாணி, அந்தியூா், அம்மாபேட்டை, மேட்டூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா் வழியாக திருப்பதி சென்றடைகிறது.
அந்தியூா் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.30 மணிக்கு திருப்பதி சென்றடையும். திருப்பதியில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு அந்தியூா் வந்தடையும். அந்தியூரிலிருந்து திருப்பதிக்கு பயணக் கட்டணம் ரூ.455.
அந்தியூா் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் கொடியசைத்து இச்சேவையைத் தொடங்கிவைத்தாா். இந்த தொடக்க நிகழ்ச்சியில் திமுகவினா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.