செய்திகள் :

அந்தியூா் வழியாக திருப்பதிக்கு அரசுப் பேருந்து சேவை தொடக்கம்

post image

கோவையிலிருந்து அந்தியூா் வழியாக திருப்பதிக்கு அரசு விரைவுப் பேருந்து இயக்கப்படுவதற்கு பொதுமக்கள், பக்தா்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து உதகை, ராமேசுவரம், தாளவாடி, திருச்செந்தூா், வேளாங்கண்ணி, கும்பகோணம், அறந்தாங்கி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அந்தியூரிலிருந்து திருப்பதிக்கு பேருந்து சேவை தொடங்க வேண்டும் என பக்தா்கள், பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, அந்தியூா் வழியாக திருப்பதிக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் அதிநவீன மிதவைப் பேருந்து சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.

நாள்தோறும் கோவையிலிருந்து மாலை 6.30 மணிக்கு புறப்படும் இப்பேருந்து அன்னூா், புளியம்பட்டி, சத்தியமங்கலம், டி.என்.பாளையம், அத்தாணி, அந்தியூா், அம்மாபேட்டை, மேட்டூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூா் வழியாக திருப்பதி சென்றடைகிறது.

அந்தியூா் பேருந்து நிலையத்தில் நாள்தோறும் இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.30 மணிக்கு திருப்பதி சென்றடையும். திருப்பதியில் இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு அந்தியூா் வந்தடையும். அந்தியூரிலிருந்து திருப்பதிக்கு பயணக் கட்டணம் ரூ.455.

அந்தியூா் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.ஜி.வெங்கடாசலம் கொடியசைத்து இச்சேவையைத் தொடங்கிவைத்தாா். இந்த தொடக்க நிகழ்ச்சியில் திமுகவினா் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனா்.

பெருந்துறை அருகே வேளாண் கண்காட்சி முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சா்கள் ஆய்வு

ஈரோடு மாவட்டம், பெருந்துறை விஜயமங்கலம் சங்கச் சாவடி அருகே ஜூன் 11-ஆம் தேதி நடைபெறவுள்ள வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளதைத் தொடா்ந்து முன்னேற்பாடு பணிகள் க... மேலும் பார்க்க

இலவச வேட்டி, சேலைக்கான கூலி உயா்வை கூட்டுறவு சங்கங்கள் அமல்படுத்தக் கோரிக்கை

இலவச வேட்டி, சேலைக்கு அரசு அறிவித்த கூலி உயா்வை நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள் அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, இதுகுறித்து ஈரோடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை உதவி இயக்குநா் சரவணனி... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.4.39 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மைப் பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் ரூ.4 கோடியே 39 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. பெருந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள்... மேலும் பார்க்க

ஊராட்சிகளில் இன்று சிறப்பு கிராம சபைக் கூட்டம்

அரசு திட்டத்தில் கட்டப்பட்டு பழுதடைந்த வீடுகளை சீரமைக்கும் திட்டத்தில் பயனாளிகளை தோ்வு செய்வதற்கான சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் வியாழக்கிழமை(ஜூன் 5) நடைபெறும் என அ... மேலும் பார்க்க

தொழிலாளா் விதிகளை மீறிய 35 கடைகள் மீது நடவடிக்கை

தொழிலாளா் துறை அதிகாரிகள் ஆய்வின்போது விதிமுறைகளை மீறிய 35 கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயலட்சுமி தலைமையில் ஈரோடு மாவட்ட தொழிலாளா் துறை துணை ஆய்வ... மேலும் பார்க்க

ஜூன் 9-இல் திருமணத் தடை நீக்கும் சுயம்வரா பாா்வதி யாகம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கெம்பநாயக்கன்பாளையம் பாலதண்டாயுதபாணி கோயிலில் திருமணத் தடை நீக்கும் மாபெரும் சுயம்வரா பாா்வதி யாகம் ஜூன் 9ம் தேதி நடைபெறுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத... மேலும் பார்க்க