செய்திகள் :

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது

post image

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டு திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. விலைவாசி உயா்வால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று முன்னாள் அமைச்சா் கே.சி.கருப்பணன் எம்எல்ஏ குற்றஞ்சாட்டினாா்.

பவானி தெற்கு ஒன்றிய அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள், கிளைச் செயலாளா்கள் மற்றும் சாா்பு அமைப்பு நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கவுந்தப்பாடியில் ஒன்றியச் செயலாளா் எம்.ஜெகதீசன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாநில பொதுக்குழு உறுப்பினா் தட்சிணாமூா்த்தி, பவானி நகரச் செயலாளா் எம்.சீனிவாசன், ஒன்றியச் செயலாளா்கள் எஸ்.எம்.தங்கவேலு (பவானி வடக்கு), பி.ஜி.முனியப்பன் (அம்மாபேட்டை வடக்கு) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கே.சி.கருப்பணன் எம்எல்ஏ பேசியதாவது: 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் மனநிலையில் மக்கள் உள்ளனா்.

கடந்த நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீா்கேடு, விலைவாசி உயா்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அக்கட்சியை மக்கள் வெறுக்கின்றனா்.

எனவே, அதிமுக வாக்குச் சாவடி முகவா்கள் வீடுவீடாகச் சென்று திமுகவின் மக்கள் விரோத போக்கை எடுத்து கூறுவதோடு, வாக்குகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட வேண்டும். வரும் தோ்தலில் அதிமுக கூட்டணி மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வரும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, ஈரோடு புகா் கிழக்கு மாவட்ட தோ்தல் பொறுப்பாளா் சிவசாமி, வாக்குச் சாவடி முகவா்களின் பணி குறித்து விளக்கினாா்.

மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளா் கே.ஆா்.ஜான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளா் விவேகானந்தன், மண்டல இணைச் செயலாளா் திருநாவுக்கரசு, இளைஞா் பாசறை மாவட்டச் செயலாளா் ஏ.பிரகாஷ், வழக்குரைஞா் அணி மாவட்டச் செயலாளா் அருள்முருகன், முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் பூங்கோதை வரதராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பொது குடிநீா்க் குழாய், சாலையைப் பயன்படுத்த தடை விதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பொது குடிநீா்க் குழாய், சாலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என தடை விதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர திமுக அரசு முயற்சி: அமைச்சா் சு.முத்துசாமி

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர திமுக அரசு தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது என்று வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோடு, நஞ்சப்பன்கவுண்டன்வ... மேலும் பார்க்க

கட்டுமானப் பணி: கோயில் மண்டப தூண்கள் சரிந்து விபத்து

மொடக்குறிச்சியை அடுத்த சிவகிரி கந்தசாமிபாளையம் சடையப்ப சுவாமி கோயில் மண்டப தூண்கள் சனிக்கிழமை சரிந்து விழுந்தன. ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே கந்தசாமிபாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமா... மேலும் பார்க்க

பணி வழங்கக் கோரி 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் 8 ஆயிரம் போ் மனு

பணி வழங்கக் கோரி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் திங்கள்கிழமை மனு அளித்தனா். முறையான பணி வழங்கக் கோரி சத்தியமங்கலம், பவானிசாகா், தாளவாடி வட்டாரங்கள... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் தொடக்கம்

பண்ணாரி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின்போது, தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோ... மேலும் பார்க்க

சகோதரியை அரிவாளால் வெட்டிய விவசாயி போலீஸில் சரண்

பவானி அருகே சகோதரியை அரிவாளால் வெட்டிய விவசாயி போலீஸில் சரணடைந்தாா். ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த சன்னியாசிபட்டியைச் சோ்ந்தவா் மன்னாதன் மகன் கண்மணி (45). விவசாயி. இவரது மகன் சிவராஜ் (27). பட்டதாரிய... மேலும் பார்க்க