செய்திகள் :

நிஃப்டி 0.74% சரிவு; சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகம் நிறைவு!

post image

நாட்டின் மிகப்பெரிய தனியார் வங்கிகளின் பங்குகள் இன்றைய பங்கு வர்த்தகத்தின்போது பின்னடைவை சந்தித்ததன் எதிரொலியாக, நிஃப்டி மூன்றாவது நாளாக வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

சென்செக்ஸ் 363.24 புள்ளிகள் அதாவது 0.78 சதவீதம் சரிவடைந்து 80,737.51 என்ற நிலையிலும், நிஃப்டி 174.10 புள்ளிகள் அல்லது 0.70 சதவீதம் சரிந்து 24,542.50 புள்ளிகளிலும் வர்த்தகம் நிறைவு பெற்றது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, வெளிநாட்டு நிதி அதிகரிப்பு போன்றவை, பங்குச் சந்தைகளில் எதிரொலித்துள்ளன.

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், பெரும்பாலான நிறுவனப் பங்குகள் சிவப்பு அம்புகுறியுடன்தான் முடிவடைந்துள்ளது. அதிலும் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனங்களின் பங்குகள் மிக மோசமான இழப்பை சந்தித்துள்ளன.

வர்த்தகத்தின் தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாள்களாக லாபம் பார்த்து வந்த பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் இன்று சரிவடைந்தன.

இன்றைய வர்த்தகத்தின்போது, ஸொமாட்டோ, டாடா ஸ்டீல், எம் அன்ட் எம், டாடா மோட்டார்ஸ், ஆசியன் பெயின்ட்ஸ் நிறுவனப் பங்குகள் லாபத்தை அடைந்தன.

அதே வேளையில், எல் அன்ட் டி, பஜாஜ் பினான்ஸ், பார்தி ஏர்டெல், எச்யுஎல், ஐசிஐசிஐ வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, மாருதி சுசூகி உள்ளிட்டவை சரிவை நோக்கி நகர்ந்துள்ளன. 13 துறைகளின் பங்குகளில் 7 பங்குகள் லாபம் அடைந்தாலும் அவை சுமார் ரகம்தான்.

தென்னகத்துக்கு வெளியே புதிய மைல்கல்லை கடந்த சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ்

2024-25-ஆம் நிதியாண்டில் தென்னிந்திய சந்தைகள் அல்லாத பிற சந்தைகளில் வீட்டுக் கடன் பிரிவில் ரூ.1,000 கோடி வழங்கல் என்ற மைல்கல்லை சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் கடந்துள்ளது. இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்... மேலும் பார்க்க

மாருதி விற்பனை 3% அதிகரிப்பு

மாருதி சுஸுகி இந்தியா நிறுவனத்தின் மொத்த விற்பனை கடந்த மே மாதத்தில் 3 சதவீதம் உயா்ந்துள்ளது.இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த மே மாதத்தில் நிறுவனத்... மேலும் பார்க்க

3 நாள் சரிவுக்குப் பிறகு சென்செக்ஸ் லாபத்தில் முடிவு!

நமது நிருபா் கடந்த மூன்று வா்த்தக நாள்களாகத் தொடா்ந்து சரிவைச் சந்தித்து வந்த பங்குச்சந்தை புதன்கிழமை நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய ப... மேலும் பார்க்க

9% அதிகரித்த பெட்ரோல் விற்பனை

இந்தியாவில் பெட்ரோல் விற்பனை கடந்த மே மாதத்தில் இரண்டாவது மாதமாக 8.77 சதவீதம் உயா்ந்துள்ளது. ஆனால், டீசல் விற்பனை மந்தமாகவே உள்ளது.இது குறித்து, எரிபொருள் சந்தையில் 90 சதவீதத்தைக் கட்டுப்படுத்தும் மூ... மேலும் பார்க்க

ஈக்விட்டி பங்குகள், வாரண்டுகள் மூலம் ரூ.416 கோடி திரட்டும் அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ்!

புதுதில்லி: விண்வெளி, பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைகளில் முன்னணி தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனமான அப்பல்லோ மைக்ரோ சிஸ்டம்ஸ், ஈக்விட்டி பங்குகள் மற்றும் மாற்றத்தக்க வாரண்டுகளின் முன்ன... மேலும் பார்க்க

வோடபோன் ஐடியா பங்குகள் 2% மேல் உயர்ந்து முடிவு!

புதுதில்லி: வோடபோன் ஐடியாவின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் சரிவிலிருந்து மீண்டு, வர்த்தக முடிவில் 2 சதவிகிதம் வரை உயர்ந்து முடிவடைந்தது.கடனில் சிக்கித் தவிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனமான வோடபோன் ஐடியா... மேலும் பார்க்க