செய்திகள் :

பிரசாந்த் கிஷோர் மீது அவதூறு வழக்கு!

post image

ஜன் சூராஜ் கட்சித் தலைவரான பிரசாந்த் கிஷோருக்கு எதிராக பிகார் மாநில அமைச்சர் அஷோக் சௌதரி, அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான அஷோக் சௌதரி, தனது மகளுக்கு மக்களவையில் இடம் ஒதுக்க ஒன்றிய அமைச்சர் ஒருவருக்கு லஞ்சம் வழங்கினார் என அரசியல் வியூக வகுப்பாளரும் ஜன் சூராஜ் கட்சித் தலைவருமான பிரசாந்த் கிஷோர் பேசியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோருக்கு எதிராக அஷோக் சௌதரி அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

“பிரஷாந்த் கிஷோர், எனக்கும் எனது மகளுக்கும் எதிராகப் பேசிய அவதூறு கருத்துக்களைத் தொடர்ந்து, நான் அவருக்கு சட்டப்பூர்வமான நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு, அவரது பதில் திருப்திகரமாக இல்லை. இதன்மூலம், அவர் கூறியதற்கு கொஞ்சமும் அவர் வருத்தப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகின்றது.

இதனால், நான் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்துள்ளேன். பிரசாந்த் கிஷோருக்கு சவால் விடுகிறேன், நான் சிராக் பஸ்வானுக்கு பணம் வழங்கியதாக அவர் கூறுவதை நிருபித்து காட்டட்டும் அல்லது உங்களது கருத்தை மன்னிப்புடன் திரும்பப் பெறுங்கள். இந்தப் போராட்டத்தில், ஒருவேளைத் தேவைப்பட்டால் நான் உச்ச நீதிமன்றம் செல்லவும் தயாராக இருக்கிறேன்.” என அவர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளரான, பிரசாந்த் கிஷோரை, அரசியல் வியாபாரி என குறிப்பிட்ட சௌதரி, அவர் அனைத்துக் கட்சிகளுக்கும் பணத்துக்காகப் பணியாற்றினார் என விமர்சித்துள்ளார்.

இத்துடன், “நாங்கள் இரண்டாம் தலைமுறையாக முழுவதுமாக அரசியலில் உள்ளவர்கள், எனது மகள் இளம் எம்பி” எனக் கூறியதுடன், ஒரு தலித் பெண்ணின் இந்தச் சாதனையை பிரசாந்த் கிஷோரால் ஜீரணிக்க முடியவில்லை எனவும் அவர் கூறியுள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுப் பொருளாகியுள்ளது.

முன்னதாக, அஷோக் சௌதரியின் தந்தை, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பிகார் மாநில அமைச்சராகப் பணியாற்றினார். மேலும், அவரது மகளான சாம்பவி, சமஸ்திபூர் தனித் தொகுதியின், லோக் ஜன்ஷக்தி கட்சியின் மக்களவை உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:கோடை விடுமுறை.. திருப்பதியில் மே மாதம் சுவாமி தரிசனம் செய்தவர் எண்ணிக்கை!

அல்லு அர்ஜுன் போல சித்தராமையா, சிவக்குமார் கைது செய்யப்படுவார்களா? பாஜக கேள்வி

பெங்களூரு கூட்ட நெரிசலுக்கு பொறுப்பேற்று கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜிநாமா செய்வாரா என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி எங்கே ஒளிந்திருக்கிறார் என்றும் செ... மேலும் பார்க்க

ஒரே நாளில் 564 பேருக்கு கரோனா உறுதி! 7 பேர் பலி!

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 564 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.கேரளம், கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் தில்... மேலும் பார்க்க

எதிா்க்கட்சித் தலைவா் பதவிக்கான முதிா்ச்சி ராகுலிடம் இல்லை: பாஜக விமா்சனம்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் பதவிக்கான முதிா்ச்சி ராகுல் காந்தியிடம் இல்லை என்று பாஜக விமா்சித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலின்போது, அமெரிக்க அதிபா் டிரம்ப்பிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்ப... மேலும் பார்க்க

50% வரி வருவாய் பகிா்வை வலியுறுத்தும் பெரும்பான்மை மாநிலங்கள்: நிதி ஆணையம்

மத்திய அரசு வரி வருவாய் பகிா்வை 50 சதவீதமாக உயா்த்த வேண்டும் என பெரும்பான்மையான மாநிலங்கள் வலியுறுத்தி வருவதாக 16-ஆவது நிதி ஆணையத் தலைவா் அரவிந்த் பனகாரியா தெரிவித்தாா். அனைத்து மாநிலங்களிலும் ஆலோசனை... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த மேலும் ஒரு யூடியூபா்: பஞ்சாப் காவல் துறை கைது

பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் யூடியூபா் ஜோதி மல்ஹோத்ராவுடன் நெருங்கிய தொடா்புடைய பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த மேலும் ஒரு யூடியூபா் அந்த மாநில காவல் துறையால் கைது செ... மேலும் பார்க்க

இந்தியா கடுமையாக எதிா்த்தபோதிலும் பாகிஸ்தானுக்கு ஏடிபி கடன்: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்

இந்தியா கடுமையாக எதிா்ப்புத் தெரிவித்தபோதிலும், பாகிஸ்தானுக்கு ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) கடன் அளிக்க ஒப்புதல் அளித்ததாக காங்கிரஸ் விமா்சனத்துக்கு மத்திய அரசு வட்டாரங்கள் பதிலளித்தன. பாகிஸ்தானின் நி... மேலும் பார்க்க