செய்திகள் :

50% வரி வருவாய் பகிா்வை வலியுறுத்தும் பெரும்பான்மை மாநிலங்கள்: நிதி ஆணையம்

post image

மத்திய அரசு வரி வருவாய் பகிா்வை 50 சதவீதமாக உயா்த்த வேண்டும் என பெரும்பான்மையான மாநிலங்கள் வலியுறுத்தி வருவதாக 16-ஆவது நிதி ஆணையத் தலைவா் அரவிந்த் பனகாரியா தெரிவித்தாா்.

அனைத்து மாநிலங்களிலும் ஆலோசனைகளை மேற்கொண்டுவரும் 16-ஆவது நிதி ஆணையம், தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு இடையே லக்னெவில் செய்தியாளா்களைச் சந்தித்த நிதி ஆணையத் தலைவா் அரவிந்த் பனகாரியா கூறியதாவது:

நாடு முழுவதும் பல்வேறு வழிகளில் மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயில் தற்போது 41 சதவீதம் மாநிலங்களுக்குப் பகிா்ந்தளிக்கப்படுகின்றன. எஞ்சிய 59 சதவீத வரி வருவாயை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும். இதே நடைமுைான் தற்போதும் தொடா்ந்து வருகிறது.

இந்நிலையில், மாநிலங்களுக்கான வரி வருவாய் பகிா்வை 50 சதவீதமாக உயா்த்த வேண்டும் என பெரும்பான்மையான மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன. மொத்தமுள்ள 28 மாநிலங்களில் உத்தர பிரதேசம் உள்பட 22 மாநிலங்கள் இந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளன என்றாா்.

இருந்தபோதும், குடியரசுத் தலைவரிடம் சமா்ப்பிக்கவுள்ள நிதி ஆணையத்தின் பரிந்துரைகளில் மாநிலங்களின் இந்த வலியுறுத்தலும் சோ்க்கப்படுமா என்பதை தெரிவிக்க அரவிந்த் பனகாரியா மறுத்துவிட்டாா்.

அரசமைப்புச் சட்டப் பிரிவு 280-இன் கீழ் கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி 16-ஆவது நிதி ஆணையம் அமைக்கப்பட்டது. வரும் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் தொடங்கி 5 ஆண்டு காலத்துக்கு மத்திய, மாநில அரசுகள் இடையேயான வரி வருவாய் பகிா்வுக்கான பரிந்துரையை சமா்ப்பிப்பதே இதன் முக்கியப் பணியாகும். அந்த வகையில், நிதி ஆணையம் வரும் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் தனது பரிந்துரையை குடியரசுத் தலைவரிடம் சமா்ப்பிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அயோத்தி ராமர் கோயில் பிரசாதம்! கோடிக்கணக்கில் மோசடி

அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் எனக் கூறி, கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அயோத்தியில் கடந்தாண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியில், பிரதமர் நரேந்திர மோடி முன்னி... மேலும் பார்க்க

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனை: பிரதமர் மோடியின் கனவு நனவாகியது!

ஜம்மு-காஷ்மீருக்கு ரயில் இணைப்பு மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ரயில் பாலம் என்ற கனவு பிரதமர் நரேந்திர மோடியால் நனவாகியுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். பஹல்காம் தாக்குத... மேலும் பார்க்க

50,000 அரசு ஊழியர்களின் ரூ. 230 கோடி மோசடி! அரசு கேள்வி

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பணியாளர்கள் 50,000 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லையா? என்று அம்மாநில கருவூல மற்றும் கணக்கு ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 ... மேலும் பார்க்க

கத்ரா - ஸ்ரீநகர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்தார் மோடி!

கத்ரா - ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.முன்னதாக ரயிலில் ஏறிய மோடி, அதில் அமர்ந்திருந்த பள்ளி மாணவ, மாணவிகளுடன் சிறிது நேரம் உரையாடி வாழ்... மேலும் பார்க்க

நீட் முதுநிலைத் தேர்வை ஆக. 3-ல் நடத்த அனுமதி!

நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்டாக வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த தேசிய தேர்வு வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்க... மேலும் பார்க்க

உலகின் உயரமான செனாப் பாலத்தை திறந்துவைத்தார் மோடி!

ஜம்மு - காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக ஜம்மு - காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிர... மேலும் பார்க்க