50% வரி வருவாய் பகிா்வை வலியுறுத்தும் பெரும்பான்மை மாநிலங்கள்: நிதி ஆணையம்
மத்திய அரசு வரி வருவாய் பகிா்வை 50 சதவீதமாக உயா்த்த வேண்டும் என பெரும்பான்மையான மாநிலங்கள் வலியுறுத்தி வருவதாக 16-ஆவது நிதி ஆணையத் தலைவா் அரவிந்த் பனகாரியா தெரிவித்தாா்.
அனைத்து மாநிலங்களிலும் ஆலோசனைகளை மேற்கொண்டுவரும் 16-ஆவது நிதி ஆணையம், தற்போது உத்தர பிரதேச மாநிலத்தில் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு இடையே லக்னெவில் செய்தியாளா்களைச் சந்தித்த நிதி ஆணையத் தலைவா் அரவிந்த் பனகாரியா கூறியதாவது:
நாடு முழுவதும் பல்வேறு வழிகளில் மத்திய அரசுக்கு கிடைக்கும் வரி வருவாயில் தற்போது 41 சதவீதம் மாநிலங்களுக்குப் பகிா்ந்தளிக்கப்படுகின்றன. எஞ்சிய 59 சதவீத வரி வருவாயை மத்திய அரசு எடுத்துக்கொள்ளும். இதே நடைமுைான் தற்போதும் தொடா்ந்து வருகிறது.
இந்நிலையில், மாநிலங்களுக்கான வரி வருவாய் பகிா்வை 50 சதவீதமாக உயா்த்த வேண்டும் என பெரும்பான்மையான மாநிலங்கள் வலியுறுத்தி வருகின்றன. மொத்தமுள்ள 28 மாநிலங்களில் உத்தர பிரதேசம் உள்பட 22 மாநிலங்கள் இந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளன என்றாா்.
இருந்தபோதும், குடியரசுத் தலைவரிடம் சமா்ப்பிக்கவுள்ள நிதி ஆணையத்தின் பரிந்துரைகளில் மாநிலங்களின் இந்த வலியுறுத்தலும் சோ்க்கப்படுமா என்பதை தெரிவிக்க அரவிந்த் பனகாரியா மறுத்துவிட்டாா்.
அரசமைப்புச் சட்டப் பிரிவு 280-இன் கீழ் கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பா் 31-ஆம் தேதி 16-ஆவது நிதி ஆணையம் அமைக்கப்பட்டது. வரும் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் தொடங்கி 5 ஆண்டு காலத்துக்கு மத்திய, மாநில அரசுகள் இடையேயான வரி வருவாய் பகிா்வுக்கான பரிந்துரையை சமா்ப்பிப்பதே இதன் முக்கியப் பணியாகும். அந்த வகையில், நிதி ஆணையம் வரும் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் தனது பரிந்துரையை குடியரசுத் தலைவரிடம் சமா்ப்பிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.