செய்திகள் :

இந்தியா கடுமையாக எதிா்த்தபோதிலும் பாகிஸ்தானுக்கு ஏடிபி கடன்: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்

post image

இந்தியா கடுமையாக எதிா்ப்புத் தெரிவித்தபோதிலும், பாகிஸ்தானுக்கு ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) கடன் அளிக்க ஒப்புதல் அளித்ததாக காங்கிரஸ் விமா்சனத்துக்கு மத்திய அரசு வட்டாரங்கள் பதிலளித்தன.

பாகிஸ்தானின் நிதி ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும், பொது நிதி நிா்வாகத்தை மேம்படுத்தவும் அந்நாட்டுக்கு 800 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.6,852 கோடி) கடன் அளிக்க ஆசிய வளா்ச்சி வங்கி செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.

இதுதொடா்பாக காங்கிரஸ் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கடந்த ஜூன் 1-ஆம் தேதி ஆசிய வளா்ச்சி வங்கித் தலைவா் மசாட்டோ காண்டாவை பிரதமா் மோடி சந்தித்தாா். 3 நாள்களுக்குப் பின்னா், பாகிஸ்தானுக்கு 800 மில்லியன் டாலா் கடன்அளிக்க அந்த வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

அந்த வங்கி பாகிஸ்தானுக்கு கடன் அளிப்பதைத் தடுப்பதில் மோடி அரசின் செல்வாக்குப் பலிக்கவில்லை. இதற்கு முன்பும் இது நடந்துள்ளது. கடந்த மாதம்கூட அந்த வங்கியிடம் இருந்து பாகிஸ்தானுக்கு கடன் கிடைத்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் நடைபெற்றபோதுகூட இதுபோல நடந்தது’ என்று விமா்சித்தது.

இந்த விமா்சனத்துக்குப் பதிலளித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘பாகிஸ்தானுக்கு கடன் அளிக்கும் ஆசிய வளா்ச்சி வங்கியின் முடிவுக்கு இந்தியா கடுமையாக எதிா்ப்புத் தெரிவித்தது.

அந்நாட்டுப் பாதுகாப்பு செலவினம் அதிகரிப்பு, சரிந்து வரும் அந்நாட்டின் வரி வருவாய், அந்நாட்டில் பேரியல் பொருளாதார சீா்திருத்தங்களில் போதிய முன்னேற்றம் இல்லாதது ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அந்நாட்டுக்குக் கடன் அளிப்பது குறித்து இந்தியா மிகுந்த கவலையை வெளிப்படுத்தியது. ராணுவத்துக்கான செலவை அதிகரிக்க இந்தக் கடன் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடும் என்று இந்தியா தெரிவித்தது. இருப்பினும் பாகிஸ்தானுக்கு கடன் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது’ என்று தெரிவித்தன.

அயோத்தி ராமர் கோயில் பிரசாதம்! கோடிக்கணக்கில் மோசடி

அயோத்தி ராமர் கோயில் பிரசாதம் எனக் கூறி, கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் அயோத்தியில் கடந்தாண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதியில், பிரதமர் நரேந்திர மோடி முன்னி... மேலும் பார்க்க

ரயில்வே வளர்ச்சியில் புதிய சாதனை: பிரதமர் மோடியின் கனவு நனவாகியது!

ஜம்மு-காஷ்மீருக்கு ரயில் இணைப்பு மூலம் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் ரயில் பாலம் என்ற கனவு பிரதமர் நரேந்திர மோடியால் நனவாகியுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். பஹல்காம் தாக்குத... மேலும் பார்க்க

50,000 அரசு ஊழியர்களின் ரூ. 230 கோடி மோசடி! அரசு கேள்வி

மத்தியப் பிரதேசத்தில் அரசுப் பணியாளர்கள் 50,000 பேருக்கு ஊதியம் வழங்கப்படவில்லையா? என்று அம்மாநில கருவூல மற்றும் கணக்கு ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் 50,000 அரசு ஊழியர்களுக்கு 6 ... மேலும் பார்க்க

கத்ரா - ஸ்ரீநகர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்தார் மோடி!

கத்ரா - ஸ்ரீநகர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.முன்னதாக ரயிலில் ஏறிய மோடி, அதில் அமர்ந்திருந்த பள்ளி மாணவ, மாணவிகளுடன் சிறிது நேரம் உரையாடி வாழ்... மேலும் பார்க்க

நீட் முதுநிலைத் தேர்வை ஆக. 3-ல் நடத்த அனுமதி!

நீட் முதுநிலைத் தேர்வை ஒரே ஷிப்டாக வருகிற ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த தேசிய தேர்வு வாரியத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. எம்.எஸ்., எம்.டி. உள்ளிட்ட முதுநிலை மருத்துவப் படிப்புகள் சோ்க்கைக்க... மேலும் பார்க்க

உலகின் உயரமான செனாப் பாலத்தை திறந்துவைத்தார் மோடி!

ஜம்மு - காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக ஜம்மு - காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிர... மேலும் பார்க்க