செய்திகள் :

இழப்புகள் முக்கியமல்ல, பலன்தான் முக்கியம்: முப்படை தலைமைத் தளபதி!

post image

ஆபரேஷன் சிந்தூரைப் பொறுத்தவரை ஏற்பட்ட இழப்புகள் முக்கியமல்ல, அதன்மூலம் கிடைத்த பலனே முக்கியம் என்று முப்படை தலைமைத் தளபதி அனில் சௌகான் தெரிவித்துள்ளார்.

புணே சாவித்ரிபாய் பூலே பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று, ’எதிர்காலப் போர்’ என்ற தலைப்பில் மாணவர்கள் மத்தியில் அனில் சௌகான் செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.

அப்போது, பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், இந்தியா - பாகிஸ்தான் மோதலில் பயன்படுத்தப்பட்ட நவீன ஆயுதங்கள் குறித்து உரையாற்றினார்.

கருத்தரங்கில் அனில் சௌகான் பேசியதாவது:

”பஹல்காம் சம்பவம் மிகவும் கொடூரமானது. குடும்பத்தினர், குழந்தைகள் முன்னிலையில் தலையில் சுட்டுக் கொன்றனர். மதத்தை கேட்டு கொலை செய்துள்ளனர். இது நவீன உலகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாதது. சமூகத்தில் பெரும் வெறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக நடைபெறும் முதல் பயங்கரவாத சம்பவம் அல்ல இது. மேற்கத்திய நாடுகளில் ஓரிரு பயங்கரவாத சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஆனால், இந்தியாதான் அதிகபட்ச பயங்கரவாத தாக்குதலை எதிர்கொண்டுள்ளது. கிட்டத்திட்ட 20,000 பேர் பயங்கரவாத தாக்குதல்களால் பலியாகியுள்ளனர்.

இந்தியாவும் பாகிஸ்தானும் வெவ்வேறு வகையான திறன்களை கொண்டு தாக்குதலுக்கு முயற்சித்தன, எனவே இதில் ஆபத்தின் அளவும் அதிகமாக இருந்தது. நமது முழுமையான திறனை போர்க்களத்தில் வெளிப்படுத்தவில்லை. எங்களிடம் மிகச் சிறந்த ட்ரோன் எதிர்ப்பு ஏவுகணைகள் உள்ளன.

போர் என்பது அரசியல் வரலாற்றுடன் ஒத்த சொற்கள். போர் என்பது மனித நாகரிகத்தைப் போலவே பழமையானது. எந்தவொரு போரிலும் இரண்டு முக்கிய கூறுகள் உள்ளன. வன்முறை மற்றும் வன்முறைக்குப் பின்னால் உள்ள அரசியல்.

பாகிஸ்தானில் உள்ள அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டும் என்பதே ஆபரேஷன் சிந்தூரின் குறிக்கோளாக இருந்தது. பயங்கரவாத நடவடிக்கை மூலம் இந்தியாவை பிணைக் கைதிகளாக வைத்திருக்க முடியாது. பயங்கரவாதம் மற்றும் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு இந்தியா அஞ்சாது.

ராணுவ படைகள் இழப்புகள் மற்றும் பின்னடைவுகளால் பாதிக்கப்படுவதில்லை. இழப்புகள் முக்கியமல்ல, கிடைத்த பலனே முக்கியம்.

ஆபரேஷன் சிந்தூரிலும் போரும் அரசியலும் இணையான நிகழ்வாகவே நிகழ்ந்தன. ஆயிரம் முறை வெட்டி இந்தியாவை ரத்தம் சிந்தச் செய்வதே நமது எதிரியின் அணுகுமுறை.

பஹல்காமில் தாக்குதல் நடந்ததற்கு சில வாரங்களுக்கு முன்பு, பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் இந்தியாவிற்கும் இந்துக்களுக்கும் எதிராக விஷத்தைக் கக்கியிருந்தார்” எனத் தெரிவித்தார்.

ஒரே நாளில் 564 பேருக்கு கரோனா உறுதி! 7 பேர் பலி!

நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 564 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.கேரளம், கர்நாடகம், மேற்கு வங்கம் மற்றும் தில்... மேலும் பார்க்க

எதிா்க்கட்சித் தலைவா் பதவிக்கான முதிா்ச்சி ராகுலிடம் இல்லை: பாஜக விமா்சனம்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் பதவிக்கான முதிா்ச்சி ராகுல் காந்தியிடம் இல்லை என்று பாஜக விமா்சித்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் ராணுவ மோதலின்போது, அமெரிக்க அதிபா் டிரம்ப்பிடம் இருந்து ஒரு தொலைபேசி அழைப்ப... மேலும் பார்க்க

50% வரி வருவாய் பகிா்வை வலியுறுத்தும் பெரும்பான்மை மாநிலங்கள்: நிதி ஆணையம்

மத்திய அரசு வரி வருவாய் பகிா்வை 50 சதவீதமாக உயா்த்த வேண்டும் என பெரும்பான்மையான மாநிலங்கள் வலியுறுத்தி வருவதாக 16-ஆவது நிதி ஆணையத் தலைவா் அரவிந்த் பனகாரியா தெரிவித்தாா். அனைத்து மாநிலங்களிலும் ஆலோசனை... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த மேலும் ஒரு யூடியூபா்: பஞ்சாப் காவல் துறை கைது

பாகிஸ்தானுக்கு உளவு பாா்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் யூடியூபா் ஜோதி மல்ஹோத்ராவுடன் நெருங்கிய தொடா்புடைய பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த மேலும் ஒரு யூடியூபா் அந்த மாநில காவல் துறையால் கைது செ... மேலும் பார்க்க

இந்தியா கடுமையாக எதிா்த்தபோதிலும் பாகிஸ்தானுக்கு ஏடிபி கடன்: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்

இந்தியா கடுமையாக எதிா்ப்புத் தெரிவித்தபோதிலும், பாகிஸ்தானுக்கு ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) கடன் அளிக்க ஒப்புதல் அளித்ததாக காங்கிரஸ் விமா்சனத்துக்கு மத்திய அரசு வட்டாரங்கள் பதிலளித்தன. பாகிஸ்தானின் நி... மேலும் பார்க்க

எஃப்டிஐ கொள்கையில் மாற்றமில்லை

இந்தியாவுடன் நில எல்லையைப் பகிா்ந்துகொள்ளும் நாடுகளுக்கு அந்நிய நேரடி முதலீட்டு (எஃப்டிஐ) கொள்கையில் மத்திய அரசு எந்த மாற்றமும் செய்யவில்லை. சீனாவில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் அந்நிய நேரடி ... மேலும் பார்க்க