ஆர்சிபி கோப்பை வெல்ல கோயில்களில் சிறப்பு வழிபாடு!
பெங்களூரு: ஐபிஎல் 2025 கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெல்ல வேண்டி அந்த அணியின் ரசிகர்கள் கோயில்களில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர். இதனால் பெங்களூரு மாநகரில் பல கோயில்களிலும் சிவப்பு நிற ஆடையணிந்த பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.
முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்புடன், இன்று(ஜூன் 3) அகமதாபாதில் நடைபெறும் இறுதி ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த ஆட்டம் இன்றிரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த நிலையில், பெங்களூரு மட்டுமில்லாது நாடெங்கிலும் உள்ள பல முக்கிய கோயில்களில் பெங்களூரு ரசிகர்கள் வழிபாடு மேற்கொண்டதைக் காண முடிந்தது.