பெங்களூர் சின்னசாமி அரங்கில் வெறும் 35,000 பேர்தான் கூட முடியும்! ஆனால் கூடியதோ....
ஐபிஎல் இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் கோப்பை யாருக்கு?
ஐபிஎல் இறுதிப்போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் மாற்றுநாள் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரின் புதிய வெற்றியாளர் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழத் தொடங்கியுள்ள நிலையில், சரிசம பலம் வாய்ந்த இரு அணிகளும் மோதுவதால், இந்தப் போட்டியில் வெல்லப் போவது யார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற பஞ்சாப் - மும்பை மோதிய குவாலிஃபையர் 2 போட்டியும் மழையால் பாதிக்கப்பட்டு போட்டி ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. இதனால், இன்றிரவு நடைபெறும் போட்டியும் மழையால் எதிர்பார்ப்பு எழுந்தது.
இந்த நிலையில், அகமதாபாத்தில் லேசான தூரல் அவ்வப்போது பெய்து வருவதாகவும், ஆனால் முழுமையாக மழை பெய்வதற்கு 5 சதவிகிதம் மட்டுமே வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மாலை வேளையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது.
ஒருவேளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த இறுதிப் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு முழுமையாக ரத்தானால், குவாலிஃபையர் 1, 2, எலிமினேட்டர் போல் அல்லாமல், புதன்கிழமை மாற்றுநாளில் போட்டி நடத்தப்படும்.
அதேபோன்று மாற்றுநாளிலும் மழை பெய்து போட்டி முழுமையாக ரத்தாகும் பட்சத்தில் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்ததன் அடிப்படையில் பஞ்சாப் அணி கோப்பையை வென்றதாக அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4-வது முறையாக ஆர்சிபியும், 11 ஆண்டுகளுக்குப் பின்னர் பஞ்சாபும் முதல் ஐபிஎல் கோப்பைக்கான யுத்தத்தில் இறுதிப் போட்டியில் மோதுவதால், இந்தப் போட்டியில் பரபரப்புக்குப் பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இவ்விரு அணிகளும் 36 போட்டிகளில் விளையாடி இரு அணியும் தலா 18 வெற்றிகளுடன் சரிசம பலத்துடனேயே உள்ளனர்.
இதையும் படிக்க: ஆர்சிபி கோப்பை வெல்ல கோயில்களில் சிறப்பு வழிபாடு!
Weather Update: It's raining in Ahmedabad right now! #IPLFinal#RCBvsPBKSpic.twitter.com/l4w593bgXR
— RCBIANS OFFICIAL (@RcbianOfficial) June 3, 2025