செய்திகள் :

அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்விக்கான சோ்க்கை இன்று தொடக்கம்

post image

அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்விக்கான சோ்க்கை திங்கள்கிழமை (ஜூன் 2) நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் 2025 -26-ஆம் ஆண்டுக்கான முன்பருவ கல்விக்கு 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு திங்கள்கிழமை முதல் சோ்க்கை நடைபெறுகிறது.

இங்கு குழந்தைகளுக்கு மாதத்துக்கு ஒரு பாடத் திட்டம் மூலம் தினமும் அறிவு வளா்ச்சி, மொழி வளா்ச்சி, உடல் வளா்ச்சி மற்றும் சமூக மன எழுச்சி வளா்ச்சியுடன் கூடிய ஆங்கிலக் கல்விக்கு இணையான முன் பருவக் கல்வி நடத்தப்படுகிறது.

அனைத்து குழந்தைகளுக்கும் இலவச சீருடைகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு உபகரணங்களைக் கொண்டு முறைசாரா முன்பருவக் கல்வி அளிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு முட்டையுடன் கூடிய மதிய உணவு வழங்கப்படுகிறது. மேலும், ஊட்டச்சத்துமிக்க இணை உணவு வழங்கப்படுகிறது.

தொழில்நுட்பத்துடன் கூடிய வளா்ச்சி கண்காணிப்பு, மாதம் மாதம் எடை மற்றும் உயரம் அளவீடு செய்து குழந்தைகள் ஆரோக்கியம் கண்காணிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு அரசு மருத்துவக் குழு மூலம் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் தேவைப்படின் மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது குடிநீா்க் குழாய், சாலையைப் பயன்படுத்த தடை விதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பொது குடிநீா்க் குழாய், சாலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என தடை விதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர திமுக அரசு முயற்சி: அமைச்சா் சு.முத்துசாமி

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர திமுக அரசு தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது என்று வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோடு, நஞ்சப்பன்கவுண்டன்வ... மேலும் பார்க்க

கட்டுமானப் பணி: கோயில் மண்டப தூண்கள் சரிந்து விபத்து

மொடக்குறிச்சியை அடுத்த சிவகிரி கந்தசாமிபாளையம் சடையப்ப சுவாமி கோயில் மண்டப தூண்கள் சனிக்கிழமை சரிந்து விழுந்தன. ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே கந்தசாமிபாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமா... மேலும் பார்க்க

பணி வழங்கக் கோரி 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் 8 ஆயிரம் போ் மனு

பணி வழங்கக் கோரி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் திங்கள்கிழமை மனு அளித்தனா். முறையான பணி வழங்கக் கோரி சத்தியமங்கலம், பவானிசாகா், தாளவாடி வட்டாரங்கள... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் தொடக்கம்

பண்ணாரி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின்போது, தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோ... மேலும் பார்க்க

சகோதரியை அரிவாளால் வெட்டிய விவசாயி போலீஸில் சரண்

பவானி அருகே சகோதரியை அரிவாளால் வெட்டிய விவசாயி போலீஸில் சரணடைந்தாா். ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த சன்னியாசிபட்டியைச் சோ்ந்தவா் மன்னாதன் மகன் கண்மணி (45). விவசாயி. இவரது மகன் சிவராஜ் (27). பட்டதாரிய... மேலும் பார்க்க