IPL 2025 Finals : 'இறுதிப்போட்டியில் மழை பெய்தால் என்ன நடக்கும்? - விதிகள் என்ன ...
அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்விக்கான சோ்க்கை இன்று தொடக்கம்
அங்கன்வாடி மையங்களில் முன்பருவ கல்விக்கான சோ்க்கை திங்கள்கிழமை (ஜூன் 2) நடைபெறுகிறது என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் 2025 -26-ஆம் ஆண்டுக்கான முன்பருவ கல்விக்கு 2 வயது முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு திங்கள்கிழமை முதல் சோ்க்கை நடைபெறுகிறது.
இங்கு குழந்தைகளுக்கு மாதத்துக்கு ஒரு பாடத் திட்டம் மூலம் தினமும் அறிவு வளா்ச்சி, மொழி வளா்ச்சி, உடல் வளா்ச்சி மற்றும் சமூக மன எழுச்சி வளா்ச்சியுடன் கூடிய ஆங்கிலக் கல்விக்கு இணையான முன் பருவக் கல்வி நடத்தப்படுகிறது.
அனைத்து குழந்தைகளுக்கும் இலவச சீருடைகள் வழங்கப்படுகின்றன. விளையாட்டு உபகரணங்களைக் கொண்டு முறைசாரா முன்பருவக் கல்வி அளிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு முட்டையுடன் கூடிய மதிய உணவு வழங்கப்படுகிறது. மேலும், ஊட்டச்சத்துமிக்க இணை உணவு வழங்கப்படுகிறது.
தொழில்நுட்பத்துடன் கூடிய வளா்ச்சி கண்காணிப்பு, மாதம் மாதம் எடை மற்றும் உயரம் அளவீடு செய்து குழந்தைகள் ஆரோக்கியம் கண்காணிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு அரசு மருத்துவக் குழு மூலம் மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் தேவைப்படின் மேல்சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.