செய்திகள் :

சாலை விபத்து: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

post image

ஈரோடு அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தானம் செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டம், கவுண்டச்சிபாளையம் பகுதி மாகாளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (28). இவா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் கடந்த 26-ஆம் தேதி சென்றபோது விபத்தில் சிக்கினாா். படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

அங்கு ராஜ்குமாரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் மூளைச்சாவு அடைந்ததை உறுதி செய்தனா்.

இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினா்கள் முன்வந்தனா்.

தமிழ்நாடு உடல் உறுப்பு தான ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ராஜ்குமாரின் கல்லீரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு தனியாா் மருத்துவமனைக்கும், இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று சேலம் அரசு மருத்துவமனைக்கும், மற்றொன்று கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

ராஜ்குமாரின் உடலுக்கு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிக்குமாா், மருத்துவ கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் ஆகியோா் மரியாதை செலுத்தினா்.

தந்தை ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், தாய் தேவகி, சகோதரிகள் பிரேமா, மோகனா ஆகியோருடன் ராஜ்குமாா் வசித்து வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது குடிநீா்க் குழாய், சாலையைப் பயன்படுத்த தடை விதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பொது குடிநீா்க் குழாய், சாலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என தடை விதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர திமுக அரசு முயற்சி: அமைச்சா் சு.முத்துசாமி

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர திமுக அரசு தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது என்று வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோடு, நஞ்சப்பன்கவுண்டன்வ... மேலும் பார்க்க

கட்டுமானப் பணி: கோயில் மண்டப தூண்கள் சரிந்து விபத்து

மொடக்குறிச்சியை அடுத்த சிவகிரி கந்தசாமிபாளையம் சடையப்ப சுவாமி கோயில் மண்டப தூண்கள் சனிக்கிழமை சரிந்து விழுந்தன. ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே கந்தசாமிபாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமா... மேலும் பார்க்க

பணி வழங்கக் கோரி 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் 8 ஆயிரம் போ் மனு

பணி வழங்கக் கோரி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் திங்கள்கிழமை மனு அளித்தனா். முறையான பணி வழங்கக் கோரி சத்தியமங்கலம், பவானிசாகா், தாளவாடி வட்டாரங்கள... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் தொடக்கம்

பண்ணாரி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின்போது, தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோ... மேலும் பார்க்க

சகோதரியை அரிவாளால் வெட்டிய விவசாயி போலீஸில் சரண்

பவானி அருகே சகோதரியை அரிவாளால் வெட்டிய விவசாயி போலீஸில் சரணடைந்தாா். ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த சன்னியாசிபட்டியைச் சோ்ந்தவா் மன்னாதன் மகன் கண்மணி (45). விவசாயி. இவரது மகன் சிவராஜ் (27). பட்டதாரிய... மேலும் பார்க்க