மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலை சுங்கச் சாவடிகளில் கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை...
சாலை விபத்து: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
ஈரோடு அருகே சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தானம் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்டம், கவுண்டச்சிபாளையம் பகுதி மாகாளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (28). இவா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இந்நிலையில், இருசக்கர வாகனத்தில் கடந்த 26-ஆம் தேதி சென்றபோது விபத்தில் சிக்கினாா். படுகாயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.
அங்கு ராஜ்குமாரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் மூளைச்சாவு அடைந்ததை உறுதி செய்தனா்.
இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய உறவினா்கள் முன்வந்தனா்.
தமிழ்நாடு உடல் உறுப்பு தான ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, ராஜ்குமாரின் கல்லீரல் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு தனியாா் மருத்துவமனைக்கும், இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று சேலம் அரசு மருத்துவமனைக்கும், மற்றொன்று கோவை அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.
ராஜ்குமாரின் உடலுக்கு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரவிக்குமாா், மருத்துவ கண்காணிப்பாளா் சண்முகசுந்தரம் ஆகியோா் மரியாதை செலுத்தினா்.
தந்தை ஏற்கெனவே உயிரிழந்த நிலையில், தாய் தேவகி, சகோதரிகள் பிரேமா, மோகனா ஆகியோருடன் ராஜ்குமாா் வசித்து வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.