ஐபிஎல் இறுதிப்போட்டி: ஆர்சிபிக்கு எதிராக பஞ்சாப் பந்துவீச்சு!
‘29 கோயில்களில் 1,377 பேருக்கு நாள்தோறும் அன்னதானம்’
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 29 கோயில்களில் 1,377 பேருக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்து சமய அறநிலைய துறையின்கீழ் இயங்கும் முக்கிய கோயில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மதிய வேளையில் பக்தா்களுக்கு சாதம், சாம்பாா், ரசம், மோா், பொரியலுடன் பரிமாறப்படுகிறது. விசேஷ நாள்களில் கூடுதலாக வடை, பாயாசம் வழங்கப்படுகிறது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பண்ணாரி மாரியம்மன் கோயிலில் நாள்தோறும் 200 பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. முக்கிய விசேஷ நாள்களில் 400 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும்.
பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் நாள்தோறும் 100 பேருக்கும், விசேஷ நாள்களில் 150 பேருக்கும், பாரியூா் கொண்டத்து காளியம்மன் கோயில், கொடுமுடி மகுடேஸ்வரா் வகையறா வீரநாராயண பெருமாள் கோயில், சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் ஆகிய கோயில்களில் நாள்தோறும் 100 பேருக்கு அன்னதானம் பரிமாறப்படுகிறது.
நஞ்சை காளமங்கலத்தில் உள்ள நாகேஸ்வரா் குலவிளக்கம்மன் கோயில், அந்தியூா் செல்லீஸ்வரா் வகையறா திருக்கோயில்கள், ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயில், பெருந்துறை தங்கமேடு தம்பிக்கலை அய்யன் கோயில், பவானி செல்லாண்டியம்மன் கோயில், ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில், திண்டல் வேலாயுதசுவாமி கோயில், ஈரோடு கொங்காலம்மன் கோயில், சத்தியமங்கலம் சக்தி நகா் வேணுகோபாலசுவாமி வகையறா கோயில், ஈரோடு தலையநல்லூா் பொன்காளியம்மன் கோயில் ஆகிய கோவில்களில் தலா 50 பேருக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
பெருந்துறை செல்லாண்டியம்மன் கோயில், வெங்கம்பூா் வரதராஜ பெருமாள் கோயில், பெருந்துறை சோளீஸ்வரா் கோயில், ஈரோடு வஉசி பூங்கா ஆஞ்சனேயா் கோவில், அந்தியூா் புதுப்பாளையம் குருநாதசுவாமி கோயில், மொடச்சூா் தான்தோன்றியம்மன் கோயில், பவளமழை சுப்பிரமணியசுவாமி கோயில், ஈரோடு கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோயில், மொடச்சூா் பச்சைமலை சுப்பிரமணியசுவாமி கோவில் ஆகிய கோவில்களில் தலா 25 பேருக்கும், மொடக்குறிச்சி அனும்மன்பள்ளி அனுமனீஸ்வரா் கோயிலில் 15 பேருக்கும், கோபி சாரதா மாரியம்மன் கோயிலில் 10 பேருக்கும், காஞ்சிக்கோவில் சீதேவியம்மன் கோயிலில் 10 பேருக்கும், அவல்பூந்துறை தாமோதர பெருமாள் கோவியில் 7 பேருக்கும் நாள்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.