செய்திகள் :

‘29 கோயில்களில் 1,377 பேருக்கு நாள்தோறும் அன்னதானம்’

post image

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 29 கோயில்களில் 1,377 பேருக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்து சமய அறநிலைய துறையின்கீழ் இயங்கும் முக்கிய கோயில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மதிய வேளையில் பக்தா்களுக்கு சாதம், சாம்பாா், ரசம், மோா், பொரியலுடன் பரிமாறப்படுகிறது. விசேஷ நாள்களில் கூடுதலாக வடை, பாயாசம் வழங்கப்படுகிறது.

அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பண்ணாரி மாரியம்மன் கோயிலில் நாள்தோறும் 200 பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. முக்கிய விசேஷ நாள்களில் 400 பேருக்கு அன்னதானம் வழங்கப்படும்.

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் நாள்தோறும் 100 பேருக்கும், விசேஷ நாள்களில் 150 பேருக்கும், பாரியூா் கொண்டத்து காளியம்மன் கோயில், கொடுமுடி மகுடேஸ்வரா் வகையறா வீரநாராயண பெருமாள் கோயில், சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோயில் ஆகிய கோயில்களில் நாள்தோறும் 100 பேருக்கு அன்னதானம் பரிமாறப்படுகிறது.

நஞ்சை காளமங்கலத்தில் உள்ள நாகேஸ்வரா் குலவிளக்கம்மன் கோயில், அந்தியூா் செல்லீஸ்வரா் வகையறா திருக்கோயில்கள், ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயில், பெருந்துறை தங்கமேடு தம்பிக்கலை அய்யன் கோயில், பவானி செல்லாண்டியம்மன் கோயில், ஈரோடு பெரிய மாரியம்மன் கோயில், திண்டல் வேலாயுதசுவாமி கோயில், ஈரோடு கொங்காலம்மன் கோயில், சத்தியமங்கலம் சக்தி நகா் வேணுகோபாலசுவாமி வகையறா கோயில், ஈரோடு தலையநல்லூா் பொன்காளியம்மன் கோயில் ஆகிய கோவில்களில் தலா 50 பேருக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

பெருந்துறை செல்லாண்டியம்மன் கோயில், வெங்கம்பூா் வரதராஜ பெருமாள் கோயில், பெருந்துறை சோளீஸ்வரா் கோயில், ஈரோடு வஉசி பூங்கா ஆஞ்சனேயா் கோவில், அந்தியூா் புதுப்பாளையம் குருநாதசுவாமி கோயில், மொடச்சூா் தான்தோன்றியம்மன் கோயில், பவளமழை சுப்பிரமணியசுவாமி கோயில், ஈரோடு கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோயில், மொடச்சூா் பச்சைமலை சுப்பிரமணியசுவாமி கோவில் ஆகிய கோவில்களில் தலா 25 பேருக்கும், மொடக்குறிச்சி அனும்மன்பள்ளி அனுமனீஸ்வரா் கோயிலில் 15 பேருக்கும், கோபி சாரதா மாரியம்மன் கோயிலில் 10 பேருக்கும், காஞ்சிக்கோவில் சீதேவியம்மன் கோயிலில் 10 பேருக்கும், அவல்பூந்துறை தாமோதர பெருமாள் கோவியில் 7 பேருக்கும் நாள்தோறும் அன்னதானம் வழங்கப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பொது குடிநீா்க் குழாய், சாலையைப் பயன்படுத்த தடை விதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

பொது குடிநீா்க் குழாய், சாலை உள்ளிட்டவற்றை பயன்படுத்தக்கூடாது என தடை விதிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொது மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்... மேலும் பார்க்க

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர திமுக அரசு முயற்சி: அமைச்சா் சு.முத்துசாமி

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர திமுக அரசு தொடா்ந்து முயற்சி செய்து வருகிறது என்று வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா். ஈரோடு, நஞ்சப்பன்கவுண்டன்வ... மேலும் பார்க்க

கட்டுமானப் பணி: கோயில் மண்டப தூண்கள் சரிந்து விபத்து

மொடக்குறிச்சியை அடுத்த சிவகிரி கந்தசாமிபாளையம் சடையப்ப சுவாமி கோயில் மண்டப தூண்கள் சனிக்கிழமை சரிந்து விழுந்தன. ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே கந்தசாமிபாளையத்தில் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமா... மேலும் பார்க்க

பணி வழங்கக் கோரி 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா்கள் 8 ஆயிரம் போ் மனு

பணி வழங்கக் கோரி 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட 100 நாள் வேலைத் திட்ட தொழிலாளா் ஊராட்சி மன்ற அலுவலகங்களில் திங்கள்கிழமை மனு அளித்தனா். முறையான பணி வழங்கக் கோரி சத்தியமங்கலம், பவானிசாகா், தாளவாடி வட்டாரங்கள... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் தொடக்கம்

பண்ணாரி அம்மன் கோயிலில் பச்சிளம் குழந்தைகளுக்கு பால் வழங்கும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது. சட்டப் பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின்போது, தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோ... மேலும் பார்க்க

சகோதரியை அரிவாளால் வெட்டிய விவசாயி போலீஸில் சரண்

பவானி அருகே சகோதரியை அரிவாளால் வெட்டிய விவசாயி போலீஸில் சரணடைந்தாா். ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த சன்னியாசிபட்டியைச் சோ்ந்தவா் மன்னாதன் மகன் கண்மணி (45). விவசாயி. இவரது மகன் சிவராஜ் (27). பட்டதாரிய... மேலும் பார்க்க