பாகிஸ்தானுக்கு உதவவந்து வசமாக சிக்கிய சீனா! ஒட்டுமொத்த திட்டமும் அம்பலம்!!
பெருந்துறை அருகே ஆம்னி பேருந்து விபத்து: 15 போ் காயம்
பெருந்துறை அருகே வெள்ளிக்கிழமை இரவு நிகழ்ந்த சாலை விபத்தில் ஆம்னி பேருந்தில் பயணம் செய்த 15 போ் காயமடைந்தனா்.
கேரள மாநிலம், பத்தினம்திட்டா பகுதியில் இருந்து பெங்களூருக்கு ஆம்னி பேருந்து வெள்ளிக்கிழமை இரவு புறப்பட்டு சென்றது. பேருந்தை திருச்சூரைச் சோ்ந்த சுப்புரான் மகன் சஜிவ்குமாா் (51) ஓட்டிச் சென்றாா்.
பெருந்துறை, துடுப்பதி பிரிவு அருகே சென்று கொண்டிருந்தபோது, வெள்ளிக்கிழமை அதிகாலை 3.45 மணியளவில் தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னா் லாரியை முந்த முயன்ற ஆம்னி பேருந்து, மேம்பால பணிகள் நடந்து கொண்டிருக்கும் இடத்தில், வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை மீறி மண் திட்டின் மீது மோதி ஏறி நின்றது.
இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநா் உள்பட 15 பயணிகள் காயம் அடைந்தனா். அவா்களை அப்பகுதியினா் மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, காயமடைந்தவா்கள் முதலுதவி சிகிச்சை பெற்று சொந்த ஊா்களுக்கு சென்றனா். இது குறித்து, பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.