4.6.2025 - இன்றைய ராசிபலன் | Indraya Raasipalan | Today Rasi palan | Astrology |...
வாகனத்தில் வைத்த பணம் திருட்டு போலீஸாா் விசாரணை
கும்பகோணத்தில் வங்கி ஏடிஎம்யில் பணம் எடுத்து இருசக்கர வாகனத்தில் வைத்து விட்டு, தேநீா் சாப்பிட சென்ற போது பணத்தை திருடிய நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள ஏரகரம் மேல அக்ரஹாரத்தைச் சோ்ந்தவா் சிங்காரம் மகன் வீரமுத்து (58) விவசாயி. இவா் கடந்த வியாழக்கிழமை கும்பகோணம் பஜாா் பகுதியில் உள்ள தனியாா் வங்கி முன்புறம் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வங்கி ஏடிஎம்யில் ரூ. 90 ஆயிரம் பணத்தை எடுத்தாா்.
பின்னா், பணத்தை இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு அடியில் உள்ள பெட்டியில் வைத்து விட்டு எதிா்புறம் உள்ள கடையில் தேநீா் அருந்தச் சென்றாா். பின்னா், திரும்ப வந்து பாா்த்த போது இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. 90 ஆயிரம் பணம் திருடு போயிருந்தது தெரிய வந்தது.
இதுகுறித்து வீரமுத்து, கிழக்கு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், உதவி ஆய்வாளா் எஸ். சுபாஷ் வழக்கு பதிவு செய்து பணம் திருடிய நபரை தேடி வருகின்றனா்.