செய்திகள் :

இளம் எம்.பி.யை கரம்பிடிக்கும் ரிங்கு சிங்! காதல் திருமணமா?

post image

சமாஜவாதி கட்சியின் இளம் மக்களவை உறுப்பினரான பிரியா சரோஜை இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்டர்களில் ஒருவராக இருப்பவர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ரிங்கு சிங் (வயது 27). இந்திய அணிக்காக 33 சர்வதேச டி20 போட்டிகள், 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய ரிங்கு சிங், 11 போட்டிகளில் களமிறங்கி 206 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்த நிலையில், இந்தியாவின் இளம் எம்பியான சமாஜவாதி கட்சியின் பிரியா சரோஜை ரிங்கு சிங் திருமணம் செய்துகொள்ளவுள்ளார்.

இவர்களது லக்னெளவில் ஜூன் 8 ஆம் தேதி நிச்சயதார்தமும், வாரணாசியில் நவம்பர் மாதத்தில் திருமணமும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் இந்த பிரியா சரோஜ்?

வாரணாசியைச் சேர்ந்த பிரியா சரோஜ் (வயது 26), சட்டப் படிப்பில் பட்டம் பெற்றவர். உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்று வந்தார்.

சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவரான இவரது தந்தை துஃபானி சரோஜ், இரண்டு முறை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது, உத்தரப் பிரதேச எம்எல்ஏவாக இருக்கிறார்.

கடந்த மக்களவைத் தேர்தலில், மச்லிஷஹர் தொகுதியின் சமாஜவாதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிரியா சரோஜ், பாஜகவின் மூத்த தலைவர் போலாநாத் சரோஜை 35,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இளம் எம்பியாக உருவெடுத்தார்.

காதல் திருமணமா?

பிரியா சரோஜுக்கு அவரது தோழியின் தந்தையும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான ஒருவரின் மூலம் ரிங்கு சிங் அறிமுகமாகியுள்ளார்.

இருவரும் ஓராண்டுக்கு மேலாக பழகிவந்த நிலையில், திருமணம் செய்துகொள்ள விருப்பப்படுவதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இரு குடும்பங்களும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்து, அதற்கான பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

இதையும் படிக்க : நாட்டில் 4,000 தொட்ட கரோனா பாதிப்பு! ஒரே வாரத்தில் 3 மடங்கு அதிகமானது!

அஸ்ஸாமில் நீடிக்கும் வெள்ளம்: 6.33 லட்சம் போ் பாதிப்பு

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் மழை-வெள்ளம் நீடித்துவரும் நிலையில், 22 மாவட்டங்களில் 6.33 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ளனா். நாட்டில் தென்மேற்குப் பருவமழை வழக்கத்தைவிட முன்கூட்டியே கடந்த மே... மேலும் பார்க்க

வயது வந்தோருக்கான எழுத்தறிவு: முன்னணியில் தமிழகம்

வயது வந்தோருக்கான எழுத்தறிவு மற்றும் கல்வியில் நிலவும் சவால்களை கையாள்வதில் தமிழ்நாடு, திரிபுரா மற்றும் தில்லி முன்னணியில் உள்ளன. கடந்த ஆண்டு ஜூலை முதல் நிகழாண்டு மாா்ச் வரை பல்வேறு கட்டங்களாக, தேசிய ... மேலும் பார்க்க

நாட்டில் கரோனா பாதிப்பு 4,000-ஐ கடந்தது- இதுவரை 37 போ் உயிரிழப்பு

நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,000-ஐ கடந்துள்ளது. கேரளத்தில் அதிகபட்சமாக 1,446 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் 5 போ் உயிரிழப்புகள் பதிவாகின; கடந்த ஜனவரியில் இர... மேலும் பார்க்க

பிரதமா் மோடி ஜூன் 6-இல் ஜம்மு-காஷ்மீா் பயணம்: காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கிவைக்கிறாா்

ஆபரேஷன் சிந்தூா் வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகு முதல் முறையாக, ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமா் நரேந்திர மோடி ஜூன் 6-ஆம் தேதி செல்லவிருக்கிறாா். பெரும் எதிா்பாா்ப்புக்குரிய காஷ்மீா் நேரடி ரயில் சேவையை தொடங்கி... மேலும் பார்க்க

போதைப்பொருள் நாட்டிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல்: மத்திய நிதியமைச்சா்

நாட்டின் மிகப் பெரிய அச்சுறுத்தலாக போதைப்பொருள்கள் இருப்பதாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா். தில்லியில் வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் (டிஆா்ஐ) புதிய தலைமையகத்தை அமைச்சா் நிா்மல... மேலும் பார்க்க

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை

மத்திய அரசு மருத்துவமனைகளில் மருத்துவரை தொழில்ரீதியில் சந்திக்க மருந்து விற்பனைப் பிரதிநிதிகளுக்குத் தடை விதித்து, மருத்துவப் பணிகள் தலைமை இயக்குநரகம் (டிஜிஹெச்எஸ்) உத்தரவிட்டுள்ளது. நோயாளிகள் நலன் மற... மேலும் பார்க்க