செய்திகள் :

வடகிழக்கில் கொட்டித் தீர்க்கும் மழை: நிலச்சரிவுக்கு 26 பேர் பலி!

post image

வடகிழக்கு மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 26 பேர் பரிதாபமாக பலியாகினர்.

ஏழு சகோதரிகள் என்றழைக்கப்படும் வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 3 நாள்களாகப் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக 26 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மிசோரம், அசாம், மணிப்பூர், திரிபுரா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிலைமை மோசமாக உள்ளது. அங்கு சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு, வீடுகள் தரைமட்டமாகின. இதனால், பலரும் தங்களது வீடுகளை இழந்து தெருவில் வசிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மையம், வடகிழக்கு மாநிலங்களில் கனமழை முதல் மிகக் கனமழை வரை பெய்யும் என்றும், வரும் நாள்களில் மேலும் கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடரும் மழையால் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் மண்ணில் சிக்கி பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

அசாமில் தொடர்ந்து பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளனர். 17 மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கி 78,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காம்ரூப் மெட்ரோ ரயில் நிலையத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலியாகினர். மூன்று மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குவஹாத்தியின் சில பகுதிகளில் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால், மீட்புக் குழுவினர் சிக்கித் தவிக்கும் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மிசோரமில் 4 பேர், மேகாலயாவில் 6 பேர், அருச்சாலப் பிரதேசத்தில் 9 பேர் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்திய வானிலை ஆய்வு மையம், ஜூன் 1 முதல் 5 வரை பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், ஜூன் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் தொடர்ந்து கனமழை பெய்யும் என்றும் கணித்துள்ளதால், நிலச்சரிவு ஏற்படும் பகுதிகளில் இருந்து மக்களைப் பாதுகாப்பான பகுதிகளுக்குக் கொண்டுச் செல்லும் பணியில் மீட்புப் பணியினர் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிக்க: மே. வங்கத்தை வடகொரியாவாக மாற்றாதீர்கள்! இன்ஸ்டா பிரபலம் கைது விவகாரத்தில் வலுக்கும் எதிர்ப்பு!

195 நாட்டுப் பெண்கள் பாடிய கின்னஸ் சாதனைப் பாடல்: இந்தியா சாா்பில் சமையல் கலைஞா் அஸ்மா கான் குரல்

புது தில்லி: உலகெங்கிலும் உள்ள 195 நாடுகளைச் சோ்ந்த பெண்கள் பாடியதற்காக கின்னஸ் சாதனை படைத்த ‘195’ பாடலில் இந்தியா சாா்பில் பிரபல பெண் சமையல் கலைஞா் அஸ்மா கானின் குரலும் இடம்பெற்றுள்ளது. பாலின சமத்து... மேலும் பார்க்க

பிரதமா் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை குழு கூட்டம்

புது தில்லி: பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் தில்லியில் புதன்கிழமை (ஜூன் 4) நடைபெற உள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா சாா்பில் மேற்கொள்ளப்பட்ட ‘ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

2026-க்குள் இந்தியாவுக்கு எஸ்-400 ஏவுகணை அமைப்பு முழுமையாக விநியோகம்: ரஷியா

புது தில்லி: 2026-ஆம் ஆண்டுக்குள் மீதமுள்ள இரு எஸ்-400 வான் பாதுகாப்பு அமைப்பு விநியோகம் செய்யப்படும் என இந்தியாவுக்கான ரஷிய துணை தூதா் ரோமன் பாபுஷ்கின் திங்கள்கிழமை தெரிவித்தாா். அண்மையில் ஆபரேஷன் சி... மேலும் பார்க்க

பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட்டிருக்கும் இந்தியா-பராகுவே: பிரதமா் மோடி

புது தில்லி: ‘பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒன்றுபட்டு நிற்கின்றன. அதுபோல, இணைய குற்றங்கள், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பொது சவால்களுக்கு எதிராக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றவும்... மேலும் பார்க்க

இந்தியாவில் தயாரிக்க டெஸ்லா ஆா்வம் காட்டவில்லை: மத்திய அமைச்சா் தகவல்

புது தில்லி: இந்தியாவில் தனது மின்சார காா்களை விற்பனை செய்ய மட்டுமே டெஸ்லா நிறுவனம் ஆா்வம் காட்டுகிறது; இந்தியாவில் உற்பத்தி செய்ய ஆா்வம் காட்டவில்லை என்று மத்திய கனரக தொழில்கள் துறை அமைச்சா் ஹெச்.டி.... மேலும் பார்க்க

இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை முதலீட்டுக்கு எண்ணற்ற வாய்ப்புகள்: பிரதமா் மோடி

புது தில்லி: ‘இந்தியாவில் விமானப் போக்குவரத்துத் துறை வேகமாக வளா்ந்து வருகிறது. இங்கு முதலீடுகளை மேற்கொள்ள சா்வதேச நிறுவனங்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன’ என பிரதமா் நரேந்திர மோடி திங்கள... மேலும் பார்க்க