செய்திகள் :

``தமிழக ஆளுநர் நேர்மையானவர்; அவருக்கு மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும்" - சி.பி ராதாகிருஷ்ணன்

post image

மகாராஷ்டிரா ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தமிழகத்தில் பல அரசியல் தலைவர்கள் தேச விரோத சக்திகளை ஊக்குவிப்பதை முதல் வேலையாக வைத்துள்ளனர்.

சி.பி ராதாகிருஷ்ணன்

நக்சலைட்டுகளால் முன்னாள் அமைச்சர் கொலை செய்யப்பட்டது அனைவருக்கும் நினைவிருக்கும். தற்போது அர்பன் நக்சலைட்கள் எங்கும் பரவி வருகிறார்கள். இது தேச பக்தர்களின் நலனுக்கு எதிரானது. நாட்டில் தீவிரவாதம் எந்த உருவில் வந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட வேண்டும். 

மத்திய அரசு தமிழகத்துக்கு எவ்வளவு தந்தாலும் அதைப் போற்றுவதற்கு சிலருக்கு மனம் இல்லை. தமிழக அரசு, மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும். தமிழகத்தின் ஆளுநர் நேர்மையானவர்.

ஆளுநர் ரவி
ஆளுநர் ரவி

அவரது கடமைகளைச் சிறப்புடன் செய்கிறார். மாநில அரசு அவருக்கு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும். ஒன்றிய அரசு என்று கூறுவதே தவறு. மத்தியில் இருப்பது ஒன்றிய அரசு என்றால், மாநிலத்தில் இருப்பது பஞ்சாயத்து அரசா. இதுவரை இல்லாத ஒரு மொழிபெயர்ப்பை தற்போது கொண்டு வருகிறார்கள்.

நடிகர் கமல்ஹாசன் என்றைக்காவது ஒன்றை ஒழுங்காகக் கூறியுள்ளாரா? திமுகவை ஒழிப்பது தான் என்னுடைய வேலை என்று கட்சி தொடங்கினார். ஆனால் தற்போது திமுகவுடன் இருப்பதுதான் தமிழகத்துக்கு நன்மை பயக்கும் என்கிறார். அவருக்கு எது நன்மை பயக்கிறதோ, அதை தமிழகத்துக்கு நன்மை பயக்கும் என்று நினைப்பவரைப் பற்றி நான் என்ன கூற முடியும்.

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

கமல்ஹாசன் தனக்கு பதவி வேண்டும் என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பேசுவார். சமஸ்கிருத மொழியில் இருந்து தான் தமிழ் மொழி வந்தது என்று கூறினால் ஏற்றுக் கொள்வோமா?” என கேள்வி எழுப்பினார்.

'ஒரு நாள் Promotion' - ஓய்வுபெறும் நாளில் பதவி உயர்வு அளிக்கும் மத்திய அரசு; பின்னணி என்ன?

முதல்வன் படத்தில் அர்ஜுன் எப்படி 'ஒரு நாள் முதல்வர்' ஆவாரோ, அதேபோல, மத்திய அரசும் 'ஒரு நாள் பதவி உயர்வு' திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.என்ன திட்டம்? நீண்ட காலமாக ஒரு துறையில் பணிபுரிந்து வருபவர... மேலும் பார்க்க

Kashmir: "தேசப்பற்றுடன் இருப்பது அவ்வளவு கடினமா?" - காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் கேள்வி

காங்கிரஸின் மூத்த தலைவரான சல்மான் குர்ஷித், கடந்த வெள்ளிக்கிழமை, இந்தோனேசியாவில் உரையாற்றி இருந்தார். அங்கே அவர், "அரசியலமைப்பு பிரிவு 370-ன் கீழ், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து, இந்... மேலும் பார்க்க

DMK: "மதுரைக்காரர்கள் என்றால் திமுக தலைமைக்குப் பிடிக்காது" - செல்லூர் ராஜூ சொல்லும் காரணம் என்ன?

"மதுரையில் திமுகவின் பொதுக்குழு எப்போதெல்லாம் கூடுகிறதோ அப்போதெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியுள்ளார்.இன்று செய்தியாளர்களிடம் பே... மேலும் பார்க்க

மதராஸி கேம்ப்: "ஆயிரக்கணக்கான தமிழர்கள் வீதியில் தங்கும் நிலை" - BJPக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

தலைநகர் புது டெல்லியில் ஜங்க்ப்புரா பகுதியில் உள்ள மதராஸி கேம்ப் பகுதியில் ஆண்டாண்டு காலமாக வசித்துவரும் தமிழர்களின் வீடுகள், நீர்நிலைப் பகுதி ஆக்கிரமிப்பு என்று கூறி, உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அ... மேலும் பார்க்க

'தகுதியற்ற பட்டங்கள்; தேசிய கல்விக்கொள்கையை ஏற்று தான் ஆக வேண்டும்!' - மீண்டும் அரசை சீண்டும் ஆளுநர்

தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்றது முதல் தமிழக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். தமிழக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாக்களுக்கு ஒப்புதல் கொடுக்காமல் இழுத்தடித்து விவகாரம் நீதிமன்றம் வரையில் சென்... மேலும் பார்க்க

"கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமல்" - உதயநிதி உடல்நிலை குறித்து தமிழக அரசு என்ன சொல்கிறது?

கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது என்று தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை வெளியிடப்பட... மேலும் பார்க்க