செய்திகள் :

ரிங்கு சிங்குக்கும் சமாஜவாதி எம்.பி.க்கும் நிச்சயதார்த்தம்; திருமணம் எப்போது தெரியுமா?

post image

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கும் சமாஜவாதி எம்.பி. பிரியா சரோஜுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக இளம் வீரர் ரிங்கு சிங் உருவெடுத்து வருகிறார். இந்திய அணிக்காக அவர் 2 ஒருநாள் மற்றும் 33 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரராக அவர் வலம் வருகிறார்.

இதையும் படிக்க: இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஷுப்மன் கில்லுக்கான தேர்வு: முன்னாள் தேர்வுக்குழு உறுப்பினர்

ஜூன் 8-ல் நிச்சயதார்த்தம்; திருமணம் எப்போது?

வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரரான ரிங்கு சிங்குக்கும் சமாஜவாதி எம்.பி. பிரியா சரோஜுக்கும் வருகிற ஜூன் 8-ஆம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை பிரியா சரோஜின் தந்தை டூஃபானி சரோஜ் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவர்கள் இருவரின் திருமணம் பராம்பரிய முறைப்படி வாராணசியில் உள்ள ஹோட்டல் தாஜில் இந்த ஆண்டு நவம்பர் 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இவர்களது திருமணத்துக்கு கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் பிரபலங்கள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலருக்கு அழைப்பிதழ் அனுப்பப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

ரிங்கு சிங் - பிரியா சரோஜ் இருவரின் நிச்சயதார்த்தத்தில் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நட்பு வட்டாரங்கள் மட்டும் கலந்துகொள்ளவுள்ளதாகக் கூறப்படுகிறது.

26 வயதாகும் பிரியா சரோஜ் சமாஜவாதி சார்பில் ஜான்பூரின் மச்சிலிசார் தொகுதிக்கு முதல் முறையாக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார். இவரது தந்தை டூஃபானி சரோஜ் சமாஜவாதி கட்சியில் இரண்டு முறை எம்.பி.யாக இருந்துள்ளார்.

இதையும் படிக்க: சிறந்த தலைவன், தலைசிறந்த மனிதன்..! தோனி குறித்து உர்வில் படேல்!

பிரியா சரோஜின் தந்தையின் நண்பரும், முன்னாள் கிரிக்கெட்டருமான ஒருவரின் மூலம் ரிங்கு சிங்குக்கு பிரியா சரோஜ் அறிமுகமாகியிருக்கிறார். அதன் பின், ரிங்கு சிங் மற்றும் பிரியா சரோஜ் இருவரும் கடந்த சில காலமாக நண்பர்களாக பழகி வந்ததுள்ளனர். பின்னர், அவர்களது நட்பு குடும்பத்தினரின் சம்மதத்துடனும் இந்த திருமண ஏற்பாடாக மாறியுள்ளது.

இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பை! 12 ஆண்டுகளுக்குப் பின்..!

மகளிருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளதை ஐசிசி அதிகாரபூர்வமாக உறுதிசெய்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை, ... மேலும் பார்க்க

பிசிசிஐ-யின் இடைக்காலத் தலைவராகிறார் ராஜீவ் சுக்லா!

பிசிசிஐயின் இடைக்காலத் தலைவராக தற்போதைய துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தேர்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்போதைய தலைவரான ரோஜர் பின்னியின் பத... மேலும் பார்க்க

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கிளாசன் ஓய்வு!

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஹெய்ன்ரிச் கிளாசன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டராக வி... மேலும் பார்க்க

2-வது ஒருநாள்: சதம் விளாசிய கீஸி கார்ட்டி; இங்கிலாந்துக்கு 309 ரன்கள் இலக்கு!

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 308 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கார... மேலும் பார்க்க

டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: ஆஸி. வீரர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மார்னஸ் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் தெரிவித்துள்ளார்.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: இரட்டை சதம் விளாசிய கருண் நாயர்; இந்தியா ஏ 557 ரன்கள் குவிப்பு!

இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 557 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்... மேலும் பார்க்க