செய்திகள் :

2-வது ஒருநாள்: சதம் விளாசிய கீஸி கார்ட்டி; இங்கிலாந்துக்கு 309 ரன்கள் இலக்கு!

post image

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 308 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கார்டிஃபில் இன்று (ஜூன் 1) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மேற்கிந்தியத் தீவுகள் முதலில் விளையாடியது.

இதையும் படிக்க: டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: ஆஸி. வீரர்

சதம் விளாசிய கீஸி கார்ட்டி

முதலில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 47.4 அணி ஓவர்களில் 308 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய கீஸி கார்ட்டி சதம் விளாசி அசத்தினார். அவர் 105 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 13 பவுண்டரிகள் அடங்கும்.

அவரைத் தொடர்ந்து, கேப்டன் சாய் ஹோப் 66 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். பிரண்டன் கிங் (59 ரன்கள்), ஜஸ்டின் கிரீவ்ஸ் (22 ரன்கள்) எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷீத் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். சாக்யூப் மஹ்முத் 3 விக்கெட்டுகளையும், பிரைடன் கார்ஸ், ஜேக்கோப் பெத்தேல் மற்றும் வில் ஜாக்ஸ் தலா ஒரு விக்கெட்டினை கைப்பற்றினர்.

இதையும் படிக்க: ரிங்கு சிங்குக்கும் சமாஜவாதி எம்.பி.க்கும் நிச்சயதார்த்தம்; திருமணம் எப்போது தெரியுமா?

309 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

இந்தியாவில் மகளிர் உலகக் கோப்பை! 12 ஆண்டுகளுக்குப் பின்..!

மகளிருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளதை ஐசிசி அதிகாரபூர்வமாக உறுதிசெய்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இலங்கை, ... மேலும் பார்க்க

பிசிசிஐ-யின் இடைக்காலத் தலைவராகிறார் ராஜீவ் சுக்லா!

பிசிசிஐயின் இடைக்காலத் தலைவராக தற்போதைய துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தேர்தெடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தற்போதைய தலைவரான ரோஜர் பின்னியின் பத... மேலும் பார்க்க

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கிளாசன் ஓய்வு!

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஹெய்ன்ரிச் கிளாசன் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டராக வி... மேலும் பார்க்க

டபிள்யூடிசி இறுதிப்போட்டியில் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: ஆஸி. வீரர்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மார்னஸ் லபுஷேன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் பியூ வெப்ஸ்டர் தெரிவித்துள்ளார்.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற... மேலும் பார்க்க

ரிங்கு சிங்குக்கும் சமாஜவாதி எம்.பி.க்கும் நிச்சயதார்த்தம்; திருமணம் எப்போது தெரியுமா?

இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்குக்கும் சமாஜவாதி எம்.பி. பிரியா சரோஜுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளது.இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவராக இளம் வீரர் ரிங்கு சிங் உருவெடுத்து வருகிறார். ... மேலும் பார்க்க

முதல் டெஸ்ட்: இரட்டை சதம் விளாசிய கருண் நாயர்; இந்தியா ஏ 557 ரன்கள் குவிப்பு!

இங்கிலாந்து லயன்ஸுக்கு எதிரான அதிகாரபூர்வமற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 557 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்... மேலும் பார்க்க