செய்திகள் :

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

post image

மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம் வழங்கும் இரு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

அனைத்து வகை உள்ளாச்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழங்கும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக வகைசெய்யும் அரசினர் திருத்தச் சட்டமுன்வடிவுகள் முன்னதாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

அதாவது, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், அதாவது, கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியங்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் மாற்றுத்திறனாளிகள் நேரடியாக தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உறுப்பினராக ஆக்கப்படுவார்கள்.

இதன்மூலமாக உள்ளாட்சி அமைப்புகளில், மாற்றுத் திறனாளிகளுடைய பிரதிநிதித்துவம் உறுதி செய்யப்பட்டு, அவர்கள் தங்களுக்கான வாய்ப்புகளையும், சிறப்புரிமைகளையும் சமமாகப் பெறுவதற்கு இந்தச் சட்டமுன்வடிவுகள் வழிவகுக்கும்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஆகிய  துறைகளின் சார்பாக இரண்டு சட்டமுன்வடிவுகள் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் முன்னதாக அறிமுகப்படுத்தினார்.

இந்த நிலையில், இரு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதையும் படிக்க: கலைஞர் கருணாநிதி பிறந்த நாளில் பொன்விழா காணும் இரு சமூகநலத் திட்டங்கள்!

இரட்டை இலை சின்னம்: தோ்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையத்திற்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள உறுப்பினா்களுக்கான மாநிலங்களவவை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா: ஆக்சிஜன், மருந்துகள், செயற்கை சுவாசக் கருவிகள் போதிய இருப்பு -மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன், தனிமை படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகள் (வென்டிலேட்டா்) மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் போதிய இருப்பை உறுதி ச... மேலும் பார்க்க

மரக்காணம் கலவரம்: பாமகவிடம் இழப்பீடு வசூலிப்பது குறித்து 8 வாரங்களில் அரசு உத்தரவிட வேண்டும்

கடந்த 2013-ஆம் ஆண்டு நிகழ்ந்த மரக்காணம் கலவரத்தை தொடா்ந்து ஏற்பட்ட இழப்பை, பாமகவிடம் வசூலிப்பது தொடா்பான விசாரணையை உயா் நீதிமன்ற உத்தரவுப்படி நடத்தி எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு... மேலும் பார்க்க

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தள்ளிவைத்து சதி செய்யும் பாஜக: முதல்வர்

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தள்ளிவைத்து சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் நாட்டில் மக்கள் தொக... மேலும் பார்க்க

பொறியியல் சேர்க்கை: 2.90 லட்சம் பேர் விண்ணப்பம்!

தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவிற்கு இன்று(ஜூன் 4) மாலை 6 மணி வரை 2.90 லட்சம் மாணவர்கள் விண்ணப்பப் பதிவு செய்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.... மேலும் பார்க்க

ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி

ஐஐடிநுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதால் மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க