செய்திகள் :

8 பேர் பலியான விவகாரம்: வாணியம்பாடி பல் மருத்துவமனைக்கு சீல்!

post image

பல் சிகிச்சையில் 8 பேர் பலியான விவகாரத்தில் வாணியம்பாடி பல் மருத்துவமனைக்கு இன்று அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தின் வாணியம்பாடியில் 2023 ஆம் ஆண்டில் தனியார் பல் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் பலியான சம்பவம் தொடர்பாக வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவர்களைக் கொண்ட குழு விசாரணை நடத்தி வந்தது.

இந்த நிலையில், பல் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த கருவியை முறையாக தூய்மைப்படுத்தாமலும், ஒரே கருவியை அனைத்து நோயாளிகளுக்கும் பயன்படுத்தியது விசாரணையில் தெரிய வந்தது.

மருத்துவமனையின் இந்தச் செயலால் பாக்டீரியா தொற்று ஏற்பட்ட 10 பேரில் 8 பேர் பலியானதாக தமிழ்நாடு பொது சுகாதார இயக்குநரகம் தெரிவித்தது.

இதன் தொடர்ச்சியாக சம்பந்தப்பட்ட மருத்துவமனையை மாவட்ட சுகாதாரத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இணைநோய் உயிரிழப்புகள் கரோனா இறப்பாக கருதப்படாது!

இணை நோய் தாக்கத்தால் நேரிடும் உயிரிழப்புகள் கரோனா இறப்பாக கருதப்படாது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில், நீடித்த ந... மேலும் பார்க்க

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் 2 நாள்களுக்கு கூடுதல் டோக்கன்

சாா்- பதிவாளா் அலுவலகங்களில் வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படவுள்ளன. இதுகுறித்து, பதிவுத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வைகாசி மாதத்தின... மேலும் பார்க்க

இரட்டை இலை சின்னம்: தோ்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையத்திற்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள உறுப்பினா்களுக்கான மாநிலங்களவவை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா: ஆக்சிஜன், மருந்துகள், செயற்கை சுவாசக் கருவிகள் போதிய இருப்பு -மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன், தனிமை படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகள் (வென்டிலேட்டா்) மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் போதிய இருப்பை உறுதி ச... மேலும் பார்க்க

மரக்காணம் கலவரம்: பாமகவிடம் இழப்பீடு வசூலிப்பது குறித்து 8 வாரங்களில் அரசு உத்தரவிட வேண்டும்

கடந்த 2013-ஆம் ஆண்டு நிகழ்ந்த மரக்காணம் கலவரத்தை தொடா்ந்து ஏற்பட்ட இழப்பை, பாமகவிடம் வசூலிப்பது தொடா்பான விசாரணையை உயா் நீதிமன்ற உத்தரவுப்படி நடத்தி எட்டு வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசுக்கு... மேலும் பார்க்க

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தள்ளிவைத்து சதி செய்யும் பாஜக: முதல்வர்

மக்கள்தொகைக் கணக்கெடுப்பை தள்ளிவைத்து சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் நாட்டில் மக்கள் தொக... மேலும் பார்க்க