செய்திகள் :

பொள்ளாச்சி: காதலியின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் - ஆத்திரத்தில் சரமாரியாக குத்தி கொன்ற காதலன்

post image

கோவை மாவட்டம், பொள்ளாச்சி பொன்மலை நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர். முதல் பெண் (வயது 19) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கண்ணன் குடும்பத்தினர் வடுகபாளையம் முத்து நகர் பகுதியில் குடியிருந்தபோது, ராஜன் என்பவரின் குடும்பத்தினர் அருகில் வசித்து வந்துள்ளனர்.

மாணவி

ராஜனுக்கு பிரவீன் (வயது 23) என்ற மகன் உள்ளார். பிரவீன் தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். பிரவீனும், மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்தத் தகவல் இரண்டு குடும்பத்தினருக்கும் தெரிந்து அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளனர்.  சிறிது காலத்தில் ராஜன் குடும்பத்தினர் உடுமலை சாலைக்கு குடிபெயர்ந்துள்ளனர்.

ஆனாலும் பிரவீன் – மாணவி காதல் தொடர்ந்துள்ளது. மாணவி தன் கல்லூரி நண்பர்கள், உறவினர்களுடன் செல்ஃபி எடுத்து வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிவு செய்து வந்துள்ளார். இது பிரவீனுக்கு பிடிக்கவில்லை. ஆண்களுடன் புகைப்படம் எடுத்து ஸ்டேட்டஸ் வைப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று மாணவியி டம் சண்டையிட்டுள்ளார். இதில் மாணவிக்கு உடன்பாடில்லை என்பதால் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சி

ஒருகட்டத்தில் பிரவீன் மாணவியின் பெற்றோரிடம் சென்று புகார் சொல்லியுள்ளார். தங்கள் மகளுக்கு பிரவீன் தொடர்ந்து மன ரீதியாக துன்புறுத்தல் கொடுப்பதால், ‘இனி எங்கள் மகளிடம் பேசக்கூடாது.’ என்று அவர்கள் பிரவீனிடம் கூறியுள்ளனர். இதையடுத்து பிரவீன் – மாணவி காதல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முறிந்துள்ளது. ஆனால் தன்னிடம் பேசுமாறு பிரவீன், மாணவியை தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாணவி வாட்ஸ்அப்பில் வைத்த ஸ்டேட்டஸ் பிரவீனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர் நேரடியாக மாணவியின் வீட்டுக்கே சென்றுள்ளார். அப்போது வீட்டில் மாணவி மட்டும் தனியாக இருந்துள்ளார். பிரவீன் கோபத்தில் பேனா, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் மாணவியை சரமாரியாக குத்திவிட்டு தப்பியுள்ளார். நண்பகல் 12.30 மணியளவில் கண்ணன் வீடு திரும்பியபோது, மகள் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.  அருகில் இருந்தவர்களின் உதவியோடு மாணவியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

கொலை

அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். சிறிது நேரத்திலேயே பிரவீன் காவல்நிலையத்தில் சரண்டராகி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். பொள்ளாச்சி காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

'மதுபோதையில் ஏற்பட்ட தகராறு; இளைஞரை வெட்டி குளத்துக்குள் தள்ளிய கும்பல்!' - நடந்தது என்ன?

புதுக்கோட்டை, போஸ் நகர், எட்டாம் வீதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது: 23) என்ற இளைஞருக்கும், காந்திநகர் இரண்டாம் வீதி பகுதியைச் சேர்ந்த முகிலன் என்பவருக்கும் இடையே மது போதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்... மேலும் பார்க்க

திருமணம் மீறிய உறவு; மனைவியின் நண்பரை அடித்துக் கொலைசெய்த பலகாரக் கடை தொழிலாளி - நடந்தது என்ன?

கரூர் மாவட்டம், க.பரமத்தி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது: 41). இவர், கரூரில் உள்ள ஒரு பலகாரக் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அம்சா (வயது: 35). அதேபோல், மது... மேலும் பார்க்க

`அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி'- எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் மருமகன் உள்ளிட்டோர் மீது புகார்

சென்னை வெட்டுவாங்கேணி, மகாலட்சுமி தெருவைச் சேர்ந்தவர் மகாராஜா (38). இவர் கடந்த 2-ம் தேதி சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்கண்ட முகவரியில் கடந்த ... மேலும் பார்க்க

ரயில் படிக்கட்டில் நின்று ரீல்ஸ் வெளியிட்ட பெண்; கைதுசெய்து எச்சரித்த ரயில்வே போலீஸ்- நடந்தது என்ன?

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்த இளம் பெண் ஷகீலா பானு(30). இவர் ரீல்ஸ் போடுவதன் மூலம் இன்ஸ்டாவில் பிரபலம். இவர் பெங்களூரில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தபோது ஓடும்... மேலும் பார்க்க

கரூர்: 'கனடாவில் உடனே வேலை' - விவசாயியிடம் ரூ. 5.70 லட்சம் ஏமாற்றிய நபர் சிக்கியது எப்படி?

கரூர் மாவட்டம், புகளூர் நடுநானப்பரப்பு பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பாலசுப்பிரமணியன்(வயது 60). இவரது மகன் மனோஜ் பிரபாகர். இவர், பி.எஸ்.சி வேளாண் படித்து முடித்துவிட்டு வேலை இல்லாமல் வீட்டிலிருந்து வந்... மேலும் பார்க்க

``ISI தொடர்பு; பாகிஸ்தானுக்கு உளவு..'' - ஜோதி மல்ஹோத்ராவுக்கு நெருக்கமான யூடியூபர் பஞ்சாப்பில் கைது

பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக சமீப காலமாக ஹரியானா, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் 12-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு மும்பையில் போர்க்கப்பல்களை ... மேலும் பார்க்க