செய்திகள் :

குடும்பத் தகராறில் விவசாயி ஆத்திரம்: நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் படுகாயம்!

post image

வாழப்பாடி அருகே குடும்பத் தகராறில் விவசாயி ஆத்திரம்: நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் மருமகள், பேரன் படுகாயம்!

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி வட்டம், தேக்கல்பட்டி ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி குப்புசாமி (52). இவரது மனைவி லட்சுமி(48).

இவர்களுக்கு மாதேஷ்(29), சுரேஷ்(27) ஆகிய இரண்டு மகன்களும், பரமேஸ்(24) என்ற ஒரு மகளும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். வெவ்வேறு பிரிவினரை சேர்ந்த குப்புசாமி, லட்சுமி இருவரும் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டு தேக்கல்பட்டி விவசாய தோட்டத்தில் வசித்து வருகின்றனர்.

தேக்கல்பட்டி மந்தகாடு பகுதியிலுள்ள மற்றொரு விவசாய தோட்டத்தில் சுரேஷ் அவரது மனைவி அனிதா, இவர்வர்களின் மகன் சர்வபுத்திரன் ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் வசித்து வந்தனர். திங்கள்கிழமை காலை சுரேஷ் கூலி வேலைக்கு வெளியே சென்றார்.

மதியம் விவசாயி குப்புசாமி குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது குப்புசாமியும், லட்சுமிக்கும் தகராறு ஏற்பட்டது. குப்புசாமி மரக்கட்டையால் லட்சுமியை தலையில் தாக்கியுள்ளார். அப்போது மாமியார் லட்சுமிக்கு ஆதரவாக மருமகள் அனிதா தன் மகன் சர்வபுத்திரனை இடுப்பில் சுமந்தபடி சென்று குப்புசாமியை தடுத்துள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த குப்புசாமி அரசு அனுமதி இன்றி வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் மருமகள் அனிதாவை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். நாட்டு துப்பாக்கியில் இருந்து பாய்ந்த இரும்பு பால்ரஸ் குண்டுகள் சிறுவன் சர்வபுத்திரன் மற்றும் அனிதா ஆகிய இருவர் மீது மீதும் பாய்ந்தது. இதனால் இருவரும் வலியால் அலறி துடித்தனர். அக்கம் பக்கத்தினர் மீட்டு வாழப்பாடியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அதிக காயமடைந்த சிறுவன் சர்வபுத்திரன் சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். குண்டு காயங்களுடன் அனிதா மற்றும் தலையில் பலத்த காயத்துடன் மாமியார் லட்சுமி இருவரும் வாழப்பாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாயமான விவசாயி குப்புசாமியை வாழப்பாடி போலீசார் தேடி வருகின்றனர். நாட்டு துப்பாக்கியால் மாமனார் சுட்டதில் மருமகள் மற்றும் பேரன் பலத்த காயம் அடைந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.

இதையும் படிக்க: பிரதமா் தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை குழு கூட்டம்

தவெக கொடிக்கும் பகுஜன் சமாஜ் கொடிக்கும் தொடா்பில்லை: உயா்நீதிமன்றத்தில் தவெக மனு

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கும், பகுஜன் சமாஜ் கட்சியின் கொடிக்கும் எவ்விதத் தொடா்பும் இல்லை என்று தவெக பொதுச்செயலா் என்.ஆனந்த் உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளாா். பகு... மேலும் பார்க்க

மாநிலங்களவைத் தோ்தல்: இபிஎஸ்-ஸுக்கு எதிராக தோ்தல் ஆணையத்தில் புகழேந்தி மனு

நமது சிறப்பு நிருபா் மாநிலங்களவைத் தோ்தலுக்கான வேட்பு மனு படிவங்களில் அதிமுக பொதுச் செயலாளா் என்கிற முறையில் எடப்பாடி கே. பழனிசாமி கையொப்பமிட உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கு இணங்கும் வகையில் அனுமதிக்க... மேலும் பார்க்க

இணைநோய் உயிரிழப்புகள் கரோனா இறப்பாக கருதப்படாது!

இணை நோய் தாக்கத்தால் நேரிடும் உயிரிழப்புகள் கரோனா இறப்பாக கருதப்படாது என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில், நீடித்த ந... மேலும் பார்க்க

சாா்-பதிவாளா் அலுவலகங்களில் 2 நாள்களுக்கு கூடுதல் டோக்கன்

சாா்- பதிவாளா் அலுவலகங்களில் வரும் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் கூடுதல் டோக்கன்கள் விநியோகிக்கப்படவுள்ளன. இதுகுறித்து, பதிவுத் துறை சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வைகாசி மாதத்தின... மேலும் பார்க்க

இரட்டை இலை சின்னம்: தோ்தல் ஆணையத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

இரட்டை இலைச் சின்னம் விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையத்திற்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள உறுப்பினா்களுக்கான மாநிலங்களவவை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா: ஆக்சிஜன், மருந்துகள், செயற்கை சுவாசக் கருவிகள் போதிய இருப்பு -மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்

நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துவரும் நிலையில், மருத்துவமனைகளில் ஆக்சிஜன், தனிமை படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவிகள் (வென்டிலேட்டா்) மற்றும் அத்தியாவசிய மருந்துகளின் போதிய இருப்பை உறுதி ச... மேலும் பார்க்க