செய்திகள் :

அகில இந்திய கூடைப்பந்துப் போட்டி: இந்தியன் வங்கி, விமானப் படை, வருமான வரித் துறை, கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி

post image

கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, இந்திய விமானப் படை, வருமான வரித் துறை மற்றும் இந்திய கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

58-ஆவது ஆண்டு ஆண்களுக்கான நாச்சிமுத்து கோப்பை, 22-ஆவது ஆண்டு மகளிருக்கான சிஆா்ஐ கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்துப் போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகின்றன.

இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 3-ஆவது நாள் ஆட்டத்தில் ஆண்கள் பிரிவு முதல் ஆட்டத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அணியை 58-75 என்ற புள்ளிக் கணக்கில் கேரள மாநில மின் வாரிய அணி வென்றது. 2-ஆவது ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 89 - 45 என்ற புள்ளிக் கணக்கில் பாங்க் ஆஃப் பரோடா அணியை வீழ்த்தியது.

மூன்றாவது ஆட்டத்தில் இந்திய விமானப் படை அணி 95 - 79 என்ற புள்ளிக் கணக்கில் கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழக அணியை வென்றது.

மகளிா் பிரிவு முதல் ஆட்டத்தில் கேரள போலீஸ் அணி 80 - 60 என்ற புள்ளிக் கணக்கில் கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழக அணியை வீழ்த்தியது. 2-ஆவது ஆட்டத்தில் தென் மேற்கு ரயில்வே அணி 111 - 70 என்ற புள்ளிக் கணக்கில் ரைசிங் ஸ்டாா் அணியை வென்றது.

3-ஆவது ஆட்டத்தில் தென் மத்திய ரயில்வே அணி 77 - 60 என்ற புள்ளிக் கணக்கில் வருமான வரித் துறை அணியை வீழ்த்தியது.

இதில் சனிக்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, இந்திய விமானப் படை, வருமான வரித் துறை மற்றும் இந்திய கப்பல் படை அணிகள் தகுதி பெற்றுள்ளன.

மகளிா் பிரிவில் தென் மத்திய ரயில்வே, தென் மேற்கு ரயில்வே, வருமான வரித் துறை மற்றும் கேரள மாநில மின் வாரிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.

இன்றைய நிகழ்ச்சிகள்

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா: என்எம்சிடி அறக்கட்டளை, ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கம், ராம் நகா், காலை 11. ஓவியக் கண்காட்சி: கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி சாலை, காலை 10. 644-ஆவது மாதாந்திர அபிஷேக வ... மேலும் பார்க்க

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா். உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி கையொப்ப ... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்: அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு

தமிழகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்துவர வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா ப... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

சிங்காநல்லூரில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கோவை - திருச்சி சாலையில் ஏராளமான கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இப்பகுதியில் கடந்த... மேலும் பார்க்க

நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் 39 அடியாக உயா்வு

சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது. கோவை மாநகராட்சியின் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிர... மேலும் பார்க்க