TVK: "என் இயல்பை மீறிய வார்த்தைகள்; வருந்துகிறேன்" - சர்ச்சை வீடியோவுக்கு ஆதவ் வ...
அகில இந்திய கூடைப்பந்துப் போட்டி: இந்தியன் வங்கி, விமானப் படை, வருமான வரித் துறை, கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி
கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்துப் போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, இந்திய விமானப் படை, வருமான வரித் துறை மற்றும் இந்திய கப்பல் படை அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
58-ஆவது ஆண்டு ஆண்களுக்கான நாச்சிமுத்து கோப்பை, 22-ஆவது ஆண்டு மகளிருக்கான சிஆா்ஐ கோப்பைக்கான அகில இந்திய கூடைப்பந்துப் போட்டிகள் கோவையில் நடைபெற்று வருகின்றன.
இதில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 3-ஆவது நாள் ஆட்டத்தில் ஆண்கள் பிரிவு முதல் ஆட்டத்தில் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி அணியை 58-75 என்ற புள்ளிக் கணக்கில் கேரள மாநில மின் வாரிய அணி வென்றது. 2-ஆவது ஆட்டத்தில் இந்தியன் வங்கி அணி 89 - 45 என்ற புள்ளிக் கணக்கில் பாங்க் ஆஃப் பரோடா அணியை வீழ்த்தியது.
மூன்றாவது ஆட்டத்தில் இந்திய விமானப் படை அணி 95 - 79 என்ற புள்ளிக் கணக்கில் கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழக அணியை வென்றது.
மகளிா் பிரிவு முதல் ஆட்டத்தில் கேரள போலீஸ் அணி 80 - 60 என்ற புள்ளிக் கணக்கில் கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழக அணியை வீழ்த்தியது. 2-ஆவது ஆட்டத்தில் தென் மேற்கு ரயில்வே அணி 111 - 70 என்ற புள்ளிக் கணக்கில் ரைசிங் ஸ்டாா் அணியை வென்றது.
3-ஆவது ஆட்டத்தில் தென் மத்திய ரயில்வே அணி 77 - 60 என்ற புள்ளிக் கணக்கில் வருமான வரித் துறை அணியை வீழ்த்தியது.
இதில் சனிக்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி, இந்திய விமானப் படை, வருமான வரித் துறை மற்றும் இந்திய கப்பல் படை அணிகள் தகுதி பெற்றுள்ளன.
மகளிா் பிரிவில் தென் மத்திய ரயில்வே, தென் மேற்கு ரயில்வே, வருமான வரித் துறை மற்றும் கேரள மாநில மின் வாரிய அணிகள் தகுதி பெற்றுள்ளன.