ஆத்தூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு
போர் நிறுத்த ஒப்பந்தம்! ஹமாஸின் கூற்றை மறுத்த அமெரிக்கா!
இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தத்தில் ஹமாஸின் கூற்றை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை.
இஸ்ரேல் - காஸா இடையிலான போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில், போரை நிறுத்துவதற்காக ஒப்பந்தத்தையும் உருவாக்கி, அதனை இஸ்ரேல் மற்றும் காஸாவுக்கு அனுப்பி வைத்ததாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்தது.
ஒப்பந்தத்தில் கூறுவன, இரு தரப்பினரும் சண்டையை 60 நாள்களுக்கு முழுமையாக நிறுத்திவைப்பது, தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 10 பேரை ஹமாஸ் அமைப்பினா் இரண்டு கட்டங்களாக விடுவிப்பது, உயிரிழந்த 18 பிணைக் கைதிகளின் உடல்களை அவா்கள் ஒப்படைப்பது, இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவது, காஸா பகுதியில் நிவாரண உதவிகளை அதிகப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்தப் போர் நிறுத்தம் அமலுக்கு வந்து, அது நீட்டிக்கப்பட்டால் அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த செயல்திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டது.

இருப்பினும், இந்த செயல்திட்டத்துக்கு ஹமாஸ் தெரிவித்த பதிலில், நிரந்த போர் நிறுத்தம், காஸாவில் இருந்து இஸ்ரேல் படை திரும்ப வேண்டும், காஸாவில் நிவாரண உதவிகள் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.
இவற்றை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பிணைக் கைதிகள் 10 பேர் விடுவிக்கப்படுவர். உயிரிழந்த பிணைக் கைதிகள் 18 பேரின் உடல்களும் அனுப்பி வைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஹமாஸின் பதிலை ஏற்றுக் கொள்ளாத அமெரிக்கா, போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக ஹமாஸின் பதிலானது ஏற்றுக்கொள்ள முடியாதது. பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றால், நாங்கள் உருவாக்கியுள்ள ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றாக வேண்டும்.
ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால், உடனடியாக இந்த வாரத்திலேயே பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம். இதன் மூலம் போர் நிறுத்தத்தைக் கொண்டு வரலாம் என்று கூறியது.