செய்திகள் :

போர் நிறுத்த ஒப்பந்தம்! ஹமாஸின் கூற்றை மறுத்த அமெரிக்கா!

post image

இஸ்ரேல் - காஸா போர் நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தத்தில் ஹமாஸின் கூற்றை அமெரிக்கா ஏற்றுக் கொள்ளவில்லை.

இஸ்ரேல் - காஸா இடையிலான போரை நிறுத்துவதற்காக அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அந்த வகையில், போரை நிறுத்துவதற்காக ஒப்பந்தத்தையும் உருவாக்கி, அதனை இஸ்ரேல் மற்றும் காஸாவுக்கு அனுப்பி வைத்ததாக அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்தது.

ஒப்பந்தத்தில் கூறுவன, இரு தரப்பினரும் சண்டையை 60 நாள்களுக்கு முழுமையாக நிறுத்திவைப்பது, தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 10 பேரை ஹமாஸ் அமைப்பினா் இரண்டு கட்டங்களாக விடுவிப்பது, உயிரிழந்த 18 பிணைக் கைதிகளின் உடல்களை அவா்கள் ஒப்படைப்பது, இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவது, காஸா பகுதியில் நிவாரண உதவிகளை அதிகப்படுத்துவது உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இந்தப் போர் நிறுத்தம் அமலுக்கு வந்து, அது நீட்டிக்கப்பட்டால் அனைத்து பிணைக் கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த செயல்திட்டத்தை இஸ்ரேல் ஏற்றுக் கொண்டது.

இருப்பினும், இந்த செயல்திட்டத்துக்கு ஹமாஸ் தெரிவித்த பதிலில், நிரந்த போர் நிறுத்தம், காஸாவில் இருந்து இஸ்ரேல் படை திரும்ப வேண்டும், காஸாவில் நிவாரண உதவிகள் செல்வதை உறுதி செய்ய வேண்டும்.

இவற்றை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பிணைக் கைதிகள் 10 பேர் விடுவிக்கப்படுவர். உயிரிழந்த பிணைக் கைதிகள் 18 பேரின் உடல்களும் அனுப்பி வைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில், ஹமாஸின் பதிலை ஏற்றுக் கொள்ளாத அமெரிக்கா, போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக ஹமாஸின் பதிலானது ஏற்றுக்கொள்ள முடியாதது. பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றால், நாங்கள் உருவாக்கியுள்ள ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றாக வேண்டும்.

ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டால், உடனடியாக இந்த வாரத்திலேயே பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம். இதன் மூலம் போர் நிறுத்தத்தைக் கொண்டு வரலாம் என்று கூறியது.

சா்வதேச ஆதரவை திரட்ட முயற்சி: இந்தியாவுக்குப் போட்டியாக அமெரிக்கா, ரஷியாவுக்கு பாக். குழுக்கள் பயணம்

இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் அண்மையில் ஏற்பட்ட மோதலில், தனது தரப்பு நிலைப்பாட்டை எடுத்துரைத்து சா்வதேச ஆதரவை திரட்டும் நோக்கில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு 2 குழுக்களைப் பாகிஸ்தான் அனுப்பியுள... மேலும் பார்க்க

காஷ்மீா் பிரச்னைதான் பிராந்திய அமைதியைக் கெடுக்கிறது: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம்

இஸ்லாமாபாத்: இந்தியா-பாகிஸ்தான் இடையிலான காஷ்மீா் பிரச்னைதான் பிராந்திய அமைதியைக் கெடுக்கிறது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்குப் பிறகு பிரதமா் நரேந்திர ... மேலும் பார்க்க

அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பேரணி சென்றவர்களை எரித்துக் கொல்ல முயற்சி!

அமெரிக்காவில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பேரணியில் ஈடுபட்டவர்களை பெட்ரோல் ஊற்றி கொலை செய்ய ஞாயிற்றுக்கிழமை முயற்சிக்கப்பட்டுள்ளது.இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போரில் அமெரிக்க அரசு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைபாட்டை வக... மேலும் பார்க்க

பனிப்போா் சூழலை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி: சீனா குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் பனிப்போா் மனநிலையை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்ததாக சீனா குற்றஞ்சாட்டியது. சிங்கப்பூரில் நடைபெற்ற ஷாங்ரி-லா பாதுகாப்பு மாநாட்டில் அமெரிக்க பாதுகாப்பு அமை... மேலும் பார்க்க

போா் நிறுத்த திட்டத்தில் மாற்றம்: ஹமாஸ் வலியுறுத்தல் - அமெரிக்கா ஏற்க மறுப்பு

காஸாவில் போரை நிறுத்த அமெரிக்கா முன்வைத்த செயல்திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு ஹமாஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. ஆனால், அதை ஏற்க அமெரிக்கா மறுத்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் 60 நாள்களு... மேலும் பார்க்க

பாரீஸ்: கால்பந்து போட்டி வெற்றிக் கொண்டாட்டத்தில் இருவா் உயிரிழப்பு

ஐரோப்பிய கண்டத்தின் மிகப்பெரிய கால்பந்து போட்டியான சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ‘பாரீஸ் செயின்ட்-ஜொ்மைன்’ அணி முதன்முறையாக வெற்றி பெற்றதையடுத்து பிரான்ஸின் பாரீஸ் நகரில் நடந்த பெருமளவிலான கொண்டாட்டங்... மேலும் பார்க்க