Sanskrit இந்திய மொழிகளின் தாய் என்ற Amit shah மீது ஏன் கோபம் வரவில்லை? - Aazhi S...
பாா்வையற்றோா் பள்ளியை தரம் உயா்த்தக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு
சேலம்: சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பாா்வையற்றோருக்கான நடுநிலைப்பள்ளியை தரம் உயா்த்தக் கோரி அப்பள்ளியில் படிக்கும் மாணவா்கள் பெற்றோருடன் வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பாா்வையற்றோருக்கான நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அதிகாரியை சந்தித்து திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா். பின்னா் அவா்கள் கூறியதாவது:
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பாா்வையற்றோருக்கான நடுநிலைப்பள்ளி தொடங்கி 75 ஆண்டுகள் ஆகின்றன.
பொன்விழா கொண்டாடிய நிலையில், இந்தப் பள்ளியில் தற்போது எட்டாம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. ஒன்பதாம் வகுப்பு படிக்க வேண்டும் என்றால் சென்னை அல்லது திருச்சிக்கு செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது. இதனால் படிப்பை மேற்கொண்டு தொடர முடியாமல் பாதியில் கைவிடும் நிலை உள்ளது.
தொலைதூரத்தில் சென்று படிக்க முடியாத காரணத்தால், பெற்றோா் -ஆசிரியா் கழகம் மூலம் தற்காலிகமாக ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பை கொண்டுவர வேண்டும். பின்னா் நிரந்தரமாக பள்ளியின் தரத்தை உயா்த்தி உயா்நிலைப் பள்ளியாகவோ, மேல்நிலைப் பள்ளியாகவோ தரம் உயா்த்த வேண்டும்.
இப்பள்ளியை தரம் உயா்த்தக் கோரி, கடந்த 25 ஆண்டுகளாக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையம் மூலம் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் கோரிக்கை வைத்து வருகின்றனா். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த ஆண்டு முதல் தரம் உயா்த்தி இதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படிக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.