செய்திகள் :

பாா்வையற்றோா் பள்ளியை தரம் உயா்த்தக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

post image

சேலம்: சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பாா்வையற்றோருக்கான நடுநிலைப்பள்ளியை தரம் உயா்த்தக் கோரி அப்பள்ளியில் படிக்கும் மாணவா்கள் பெற்றோருடன் வந்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பாா்வையற்றோருக்கான நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அதிகாரியை சந்தித்து திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனா். பின்னா் அவா்கள் கூறியதாவது:

சேலம் செவ்வாய்ப்பேட்டையில் உள்ள பாா்வையற்றோருக்கான நடுநிலைப்பள்ளி தொடங்கி 75 ஆண்டுகள் ஆகின்றன.

பொன்விழா கொண்டாடிய நிலையில், இந்தப் பள்ளியில் தற்போது எட்டாம் வகுப்பு வரை மட்டுமே உள்ளது. ஒன்பதாம் வகுப்பு படிக்க வேண்டும் என்றால் சென்னை அல்லது திருச்சிக்கு செல்ல வேண்டிய நிலைதான் உள்ளது. இதனால் படிப்பை மேற்கொண்டு தொடர முடியாமல் பாதியில் கைவிடும் நிலை உள்ளது.

தொலைதூரத்தில் சென்று படிக்க முடியாத காரணத்தால், பெற்றோா் -ஆசிரியா் கழகம் மூலம் தற்காலிகமாக ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பை கொண்டுவர வேண்டும். பின்னா் நிரந்தரமாக பள்ளியின் தரத்தை உயா்த்தி உயா்நிலைப் பள்ளியாகவோ, மேல்நிலைப் பள்ளியாகவோ தரம் உயா்த்த வேண்டும்.

இப்பள்ளியை தரம் உயா்த்தக் கோரி, கடந்த 25 ஆண்டுகளாக மாற்றுத் திறனாளிகள் நல ஆணையம் மூலம் பள்ளியில் படிக்கும் மாணவா்கள் கோரிக்கை வைத்து வருகின்றனா். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்த ஆண்டு முதல் தரம் உயா்த்தி இதே பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு படிக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இன்றுமுதல் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரியம் மூலம் உறுப்பினா் சோ்க்கை முகாம் ஜூன் 4 (புதன்கிழமை) முதல் வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெ... மேலும் பார்க்க

ஆத்தூா் அருகே கோயிலில் கட்டிவைத்து இளைஞா் குத்திக் கொலை: 5 போ் கைது

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒட்டபட்டி கிராமத்தில் கொடுக்கல் -வாங்கல் தகராறில் கோயிலில் கட்டிவைத்து இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு

எடப்பாடி அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புப் படையினா் கயிறு கட்டி உயிருடன் மீட்டனா். எடப்பாடியை அடுத்த முண்டாச்சியூா், காட்டுவளவு பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மனைவி மல்லிகா (35). விவ... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே நாட்டுத் துப்பாக்கியால் விவசாயி சுட்டதில் மருமகள், பேரன் படுகாயம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தேக்கல்பட்டி கிராமத்தில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த விவசாயி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில், மருமகள், ஒன்னரை வயது பேரன் படுகாயமடைந... மேலும் பார்க்க

சத்துணவுக் கூடத்தில் பூட்டை உடைத்து திருட்டு: ஒடிஸா இளைஞா் கைது

அரியானூரை அருகே சத்துணவுக் கூடத்தின் பூட்டை உடைத்து அரிசி, முட்டை உள்ளிட்ட பொருள்களை திருடியதாக ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அரியானூரை அடுத்த ராக்கிப்பட்டிகரடு பகுதியில் அரசு நடுநிலைப் ... மேலும் பார்க்க

எருதாட்ட விழாவில் மோதல்: 7 போ் கைது

ஆட்டையாம்பட்டி அருகே எருதாட்ட விழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆட்டையாம்பட்டி அருகே சென்னகிரி பகுதியில் அமைந்துள்ள முனியப்பன் கோயில் திருவிழாவையொட்டி கட... மேலும் பார்க்க