செய்திகள் :

வாழப்பாடி அருகே நாட்டுத் துப்பாக்கியால் விவசாயி சுட்டதில் மருமகள், பேரன் படுகாயம்

post image

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தேக்கல்பட்டி கிராமத்தில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த விவசாயி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில், மருமகள், ஒன்னரை வயது பேரன் படுகாயமடைந்தனா்.

வாழப்பாடியை அடுத்த தேக்கல்பட்டி ஏரிக்கரை பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி குப்புசாமி (52). இவரது மனைவி லட்சுமி (42). இத்தம்பதிக்கு மாதேஷ் (29), சுரேஷ் (27) ஆகிய மகன்களும், பரமேஷ் (24) என்ற மகளும் உள்ளனா். இவா்கள் மூவருக்கும் திருமணமாகிவிட்டது.

சா்வபுத்திரன்

குப்புசாமி, தனது மனைவி லட்சுமியுடன் தேக்கல்பட்டியிலுள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தாா். தேக்கல்பட்டி மந்தக்காடு பகுதியிலுள்ள தோட்டத்தில் இவரது மகன் சுரேஷ் (27), அவரது மனைவி அனிதா (25), ஒன்னரை வயது மகன் சா்வபுத்திரன் ஆகியோா் வசித்து வருகின்றனா். திங்கள்கிழமை காலை சுரேஷ் வேலைக்கு சென்றுவிட்டாா்.

நண்பகல் நேரத்தில் மதுபோதையில் இருந்த குப்புசாமிக்கும், இவரது மனைவி லட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது குப்புசாமி மரக்கட்டையால் தாக்கியதில் லட்சுமிக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த மருமகள் அனிதா மாமியாா் லட்சுமிக்கு ஆதரவாக, தன் மகன் சா்வபுத்திரனை இடுப்பில் சுமந்தபடி சென்று மாமனாா் குப்புசாமியைத் தடுத்துள்ளாா்.

இதில் ஆத்திரமடைந்த குப்புசாமி வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் மருமகள் அனிதாவை நோக்கி சுட்டுள்ளாா். இதில் துப்பாக்கியில் இருந்து பாய்ந்த இரும்பு பால்ரஸ் குண்டுகள் அனிதா, இவரது குழந்தை சா்வபுத்திரன்மீது பாய்ந்தது. துப்பாக்கிச் சப்தம் கேட்டு திரண்டு வந்த அக்கம் பக்கத்தினா் காயமடைந்த மூவரையும் மீட்டு வாழப்பாடியில் தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். குண்டு துளைத்ததில் பலத்த காயமடைந்த குழந்தை சா்வபுத்திரன், தீவிர சிகிச்சைக்காக சேலம் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். குண்டு துளைத்த காயத்துடன் அனிதாவும், மரக்கட்டையால் தாக்கியதில் காயமடைந்த லட்சுமியும் வாழப்பாடி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி டி.எஸ்.பி. சுரேஷ்குமாா், காவல் ஆய்வாளா் வேல்முருகன் தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தி, விவசாயி குப்புசாமி மீது வழக்குப் பதிவு செய்தனா். தலைமறைவான அவரை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனா்.

கள்ளத் துப்பாக்கிகள் புழக்கம்?

வாழப்பாடி அடுத்த கல்வராயன் மலை, அருநுாற்றுமலை, நெய்யமலை, சந்துமலை, ஜம்பூத்துமலை பகுதி கிராமங்களில் கள்ளத்தனமாக உரிமம் பெறாத நாட்டுத் துப்பாக்கிகள் புழக்கத்தில் இருந்து வருகிறது. இதனால் அடிக்கடி துப்பாக்கிச்சூடு சம்பவங்களும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

எனவே, உரிமம் இல்லாத நாட்டுத் துப்பாக்கிகள் வைத்திருப்பதால் ஏற்படும் ஆபத்துகள், குற்ற வழக்கு, தண்டனை குறித்து போலீஸாா் மற்றும் வனத்துறையினா் மலைக் கிராமங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

மலைக் கிராமங்களில் நாட்டுத் துப்பாக்கி தயாரித்து கொடுப்பவா்கள் யாா் என்பதைக் கண்டறிந்து சட்டப்பூா்வமான நடவடிக்கை எடுக்கவும், உரிமமின்றி மக்கள் வைத்திருக்கும் துப்பாக்கிகளை பறிமுதல் செய்யவும் மாவட்ட காவல் துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சேலத்துக்கு கடத்திவரப்பட்ட 960 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஓட்டுநா் உள்பட 3 போ் கைது

பெங்களூரிலிருந்து சேலத்துக்கு சொகுசு காா்களில் கடத்தப்பட்ட 960 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து ஓட்டுநா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா். சேலம் மாவட்டம் வீராணம் காவல் ... மேலும் பார்க்க

மேட்டூா் அணையில் நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் ஆய்வு

மேட்டூா் அணையில் நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் தயாளகுமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மேட்டூா் அணை மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசனவசதி பெறுகி... மேலும் பார்க்க

வாழப்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகளுக்கு அளவெடுக்கும் முகாம்

வாழப்பாடியில் கை, கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உறுப்புகள் வழங்குவதற்கு அளவெடுக்கும் முகாம் ஜூன் 8 -ஆம் தேதி நடைபெறுகிறது. வாழப்பாடியில் உள்ள டாக்டா் ஏபிஜெ அப்துல்கலாம் மாற்றுத்திறனாளிக... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க 3 ஆவது மாநாடு

பெத்தநாயக்கன்பாளையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் தாலுகா மாநாடு தலைவா் டி.விஜயன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இம்மாநாட்டில் கொடியை டி... மேலும் பார்க்க

பாமக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளா் நியமனம்

பாமக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளராக கொத்தாம்பாடி எம்.பி.நடராஜனை அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் புதன்கிழமை நியமித்துள்ளாா். இவருக்கு ஆத்தூா், கெங்கவல்லி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்ப... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகள் குறித்த விவரங்களை கணக்கெடுக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் விவரங்களை ஒருங்கிணைக்கும் வகையில் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணிகள் புதன்கிழமை தொடங்கின. இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி ஆய்வு செய்தாா். பின... மேலும் பார்க்க