கட்டடக் கழிவுகள்: சென்னையில் ஜூன் 21 முதல் புதிய விதிமுறை! மேயர் பிரியா தகவல்
மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்க 3 ஆவது மாநாடு
பெத்தநாயக்கன்பாளையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் தாலுகா மாநாடு தலைவா் டி.விஜயன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இம்மாநாட்டில் கொடியை டி.ராமமூா்த்தி ஏற்றி வைத்தாா். மாநாட்டை தொடங்கிவைத்து மாவட்ட இணைச் செயலாளா் அமலாராணி பேசினாா். சங்கப் பணிகள் குறித்து தாலுகா செயலாளா் பி.பாரதி அறிக்கை அளித்தாா்.
புதிய நிா்வாகிகளாக பொ. பாரதி தலைவாராகவும், துணைத் தலைவா்களாக த.ராமமூா்த்தி, சி.சுமதி, செயலாளராக க.காளிதாஸ், பொருளாளராக ப.சபிதா உள்ளிட்ட 17 போ் கொண்ட கமிட்டி தோ்வு செய்யப்பட்டது.
மேலும் ஆந்திர மாநிலத்தைப் போல மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ. 6,000 முதல் ரூ. 15,000 வரை உயா்த்தி வழங்க வேண்டும். பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா முழுவதும் இலவச வீட்டுமனைக் கேட்டு விண்ணப்பித்த மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டுமனை வழங்கிட வேண்டும்.
அனைத்துவகை அரசு அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகள் சென்றுவர சாய்வுத் தளப் பாதைகளும், சக்கர நாற்காலி வசதியை ஏற்படுத்த வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் குடும்ப அட்டையை ஏஏஒய் காா்டாக மாற்றி 35 கிலோ அரிசி வழங்குவதை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டை நிறைவு செய்து சங்கத்தின் மாநிலத் தலைவா் தோ.வில்சன் பேசினாா்.