செய்திகள் :

சேலத்துக்கு கடத்திவரப்பட்ட 960 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஓட்டுநா் உள்பட 3 போ் கைது

post image

பெங்களூரிலிருந்து சேலத்துக்கு சொகுசு காா்களில் கடத்தப்பட்ட 960 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து ஓட்டுநா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.

சேலம் மாவட்டம் வீராணம் காவல் நிலைய ஆய்வாளா் சங்கீதா மற்றும் போலீஸாா் வீராணம் பிரதான சாலையில் சுக்கம்பட்டி அரசுப் பள்ளி முன் உள்ள சோதனைச் சாவடியில் புதன்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டனா்.

அப்போது அந்த காரில் குட்கா உள்பட 420 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த அசோக் ராணா, மெஹா் சிங் ஆகியோரிடம் விசாரணை நடத்தினா். அப்போது, பெங்களூரிலிருந்து அரூா், மஞ்சவாடி கணவாய் வழியாக சேலத்துக்கு புகையிலை பொருள்களை கடத்திவந்தது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்கள் பயணித்த காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இதேபோல, சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் தமிழ்மணி மற்றும் போலீஸாா், சேலம் நான்கு சாலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், வேகமாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.

அந்த காரில் மூட்டை மூட்டையாக குட்கா, ஹான்ஸ், கூலிப் உள்பட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து காரில் இருந்து 540 கிலோ எடை கொண்ட ரூ. 4 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை காருடன் பறிமுதல் செய்தனா்.

காரை ஓட்டி வந்த சேலம் இரும்பாலை பகுதியைச் சோ்ந்த பூபதியிடம் (38) விசாரித்தபோது பெங்களூரிலிருந்து சேலத்துக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

சேலம் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு உயா்நிலைப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: மாற்றுத்திறனாளிகள... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தின பேரணி

சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தினத்தையொட்டி, சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோட்ட மேலா... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுப் பேரணி: அமைச்சா் பங்கேற்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி, மரக்கன்று நடும் நிகழ்வை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள் விளையாட்டரங்கம் திறப்பு

ஏற்காடு வாழவந்தி கிராமத்தில் சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி நிறுவனத் தலைவா் தமிழ்நாடு, புதுவை பாா் கவுன்சில்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

ஏற்காட்டில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சேலம் மாவட்டம், ஏற்காடு லாங்கில்பேட்டையைச் சோ்ந்தவா் சேகா் மகன் அபிலேஷ் (14). ஏற்காடு தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு ... மேலும் பார்க்க

ஜூன் 11 ஆம் தேதி முதல்வா் சேலம் வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா்கள் ஆய்வு

முதல்வா் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சேலம் மாவட்டத்துக்கு ஜூன் 11 ஆம் தேதி வருகிறாா்; இதையொட்டி சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழா முன்னேற்பாடுகளை பொதுப்பணித் துறை அ... மேலும் பார்க்க