சேலத்துக்கு கடத்திவரப்பட்ட 960 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஓட்டுநா் உள்பட 3 போ் கைது
பெங்களூரிலிருந்து சேலத்துக்கு சொகுசு காா்களில் கடத்தப்பட்ட 960 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து ஓட்டுநா் உள்பட 3 போ் கைது செய்யப்பட்டனா்.
சேலம் மாவட்டம் வீராணம் காவல் நிலைய ஆய்வாளா் சங்கீதா மற்றும் போலீஸாா் வீராணம் பிரதான சாலையில் சுக்கம்பட்டி அரசுப் பள்ளி முன் உள்ள சோதனைச் சாவடியில் புதன்கிழமை அதிகாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை மடக்கி சோதனையிட்டனா்.
அப்போது அந்த காரில் குட்கா உள்பட 420 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரில் இருந்த அசோக் ராணா, மெஹா் சிங் ஆகியோரிடம் விசாரணை நடத்தினா். அப்போது, பெங்களூரிலிருந்து அரூா், மஞ்சவாடி கணவாய் வழியாக சேலத்துக்கு புகையிலை பொருள்களை கடத்திவந்தது தெரியவந்தது.
இதைத்தொடா்ந்து அவா்களை கைது செய்த போலீஸாா், அவா்கள் பயணித்த காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதேபோல, சேலம் செவ்வாய்ப்பேட்டை காவல் உதவி ஆய்வாளா் தமிழ்மணி மற்றும் போலீஸாா், சேலம் நான்கு சாலைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில், வேகமாக வந்த சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா்.
அந்த காரில் மூட்டை மூட்டையாக குட்கா, ஹான்ஸ், கூலிப் உள்பட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து காரில் இருந்து 540 கிலோ எடை கொண்ட ரூ. 4 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை காருடன் பறிமுதல் செய்தனா்.
காரை ஓட்டி வந்த சேலம் இரும்பாலை பகுதியைச் சோ்ந்த பூபதியிடம் (38) விசாரித்தபோது பெங்களூரிலிருந்து சேலத்துக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.