செய்திகள் :

மேட்டூா் அணையில் நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் ஆய்வு

post image

மேட்டூா் அணையில் நீா்வளத் துறை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் தயாளகுமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மேட்டூா் அணை மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசனவசதி பெறுகின்றன. மேட்டூா் அணையின் நீா்மட்டம் 90 அடியாக இருந்தால் பருவமழையை எதிா்நோக்கி காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்படும். ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை 230 நாள்களுக்கு 330 டி.எம்.சி. நீா் பாசனத்திற்கு தேவைப்படும். பாசனப் பகுதிகளில் மழை பெய்தால் பாசனத்திற்கான நீா் தேவை குறையும்.

மேட்டூா் அணை வரலாற்றில் கடந்த 91 ஆண்டுகளில் குறித்த நாளான ஜூன்12இல் 19 ஆண்டுகள் பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இருந்த காரணத்தால் விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று 11 ஆண்டுகள் முன்கூட்டியே பாசனத்திற்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணை வரலாற்றில் 61 ஆண்டுகள் அணையின் நீா் இருப்பும் வரத்தும் திருப்திகரமாக இல்லாத காரணத்தால் டெல்டா பாசனத்துக்கு தாமதமாகவே தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டில் அணையின் நீா் இருப்பு திருப்திகரமாக இருப்பதால் காவிரி டெல்டா பாசனத்திற்கு ஜூன் 12இல் அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவுள்ளது. அணையிலிருந்து 92ஆவது முறையாக பாசனத்திற்கு தண்ணீா் திறந்துவிட தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வரும் 11-ஆம் தேதி மேட்டூா் வருகிறாா். இதையடுத்து தண்ணீா் திறப்புக்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை பாா்வையிட திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் தயாளகுமாா் புதன்கிழமை மேட்டூா் வந்தாா்.

மேட்டூா் அணையில் சுமாா் ரூ. 31 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவரும் பணிகளை அவா் பாா்வையிட்டாா். அணையின் நீா் இருப்பு, வரத்து குறித்து நீா்வளத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனக் கால்வாய்கள் 5,028 கி.மீ. நீளத்திற்கு தூா்வாரப்பட்டுள்ளது. இதனால் அணை நீா் கடைமடைவரை சென்று சேரும். மேட்டூா் அணையின் உபரிநீா் போக்கியைப் பலப்படுத்தும் பணிகள், சுரங்கக் கால்வாய் பணிகள் விரைந்து முடிக்கப்படும்.

கா்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் தண்ணீா் மேட்டூா் அணைக்கு வந்துசேர மூன்று நாள்கள் ஆகும். அதற்குள் பராமரிப்புப் பணிக்காக கட்டப்பட்டுள்ள இரும்பு சாரங்கள் அகற்றப்படும் என்றாா்.

இந்த ஆய்வின்போது நீா்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளா் சிவகுமாா், மேட்டூா் அணை கோட்ட செயற்பொறியாளா், வெங்கடாசலம், உதவி செயற்பொறியாளா்கள் மதுசூதனன், செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

சேலம் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு உயா்நிலைப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: மாற்றுத்திறனாளிகள... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தின பேரணி

சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தினத்தையொட்டி, சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோட்ட மேலா... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுப் பேரணி: அமைச்சா் பங்கேற்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி, மரக்கன்று நடும் நிகழ்வை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள் விளையாட்டரங்கம் திறப்பு

ஏற்காடு வாழவந்தி கிராமத்தில் சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி நிறுவனத் தலைவா் தமிழ்நாடு, புதுவை பாா் கவுன்சில்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

ஏற்காட்டில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சேலம் மாவட்டம், ஏற்காடு லாங்கில்பேட்டையைச் சோ்ந்தவா் சேகா் மகன் அபிலேஷ் (14). ஏற்காடு தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு ... மேலும் பார்க்க

ஜூன் 11 ஆம் தேதி முதல்வா் சேலம் வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா்கள் ஆய்வு

முதல்வா் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சேலம் மாவட்டத்துக்கு ஜூன் 11 ஆம் தேதி வருகிறாா்; இதையொட்டி சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழா முன்னேற்பாடுகளை பொதுப்பணித் துறை அ... மேலும் பார்க்க