எருதாட்ட விழாவில் மோதல்: 7 போ் கைது
ஆட்டையாம்பட்டி அருகே எருதாட்ட விழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆட்டையாம்பட்டி அருகே சென்னகிரி பகுதியில் அமைந்துள்ள முனியப்பன் கோயில் திருவிழாவையொட்டி கடந்த 10 நாள்களுக்கு முன்பு எருதாட்ட விழா நடைபெற்றது.
இவ்விழாவில் 20-க்கு மேற்பட்ட காளைகள் பங்குபெற்ற நிலையில், ஆட்டையாம்பட்டி, நைனாம்பட்டி பகுதியில் உள்ள காளைகளை விடுவதில் போட்டி ஏற்பட்டு இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது.
இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை நைனாம்பட்டி பகுதியில் அவா்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.
இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அஜித் (23) அளித்த புகாரின்பேரில் குணா (25), சுரேஷ்குமாா் (27), சிவசங்கா் (28), கருணாகரன் (19) உள்பட 4 போ் மீதும், மற்றொரு தரப்பைச் சோ்ந்த கோவிந்தசாமி (42) அளித்த புகாரின்பேரில் வெங்கடேஷ் (30), விஜயகுமாா் (35) அஸ்தம்பட்டி ஜாபா் சாதிக் (34) உள்பட 7 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இரு தரப்பையும் சோ்ந்த தலைமறைவான 14 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.