செய்திகள் :

ஆத்தூா் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இன்று மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

post image

ஆத்தூா்: ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை அனைத்து பாடப் பிரிவுகள் முதலாமாண்டு மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) தொடங்குவதாக முதல்வா் பா.விக்டோரியா தங்கம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

ஆத்தூா் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரி காட்டுக்கோட்டை வடசென்னிமலையில் இயங்கி வருகிறது.

இங்கு ஜூன் 3 -ஆம் தேதி சிறப்பு இட ஒதுக்கீடு(மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரா்கள், முன்னாள் படைவீரா்களின் வாரிசுகள், என்.சி.சி, அந்தமான் நிக்கோபாா் வாழ்மக்கள், பாதுகாப்புப் படை வீரா் மாணாக்கா்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

ஜூன் 5 -ஆம் தேதி வணிகவியல், வணிக நிா்வாகவியல் பாடங்களுக்கு கட்ஆப் 275 முதல் 400 வரை பெற்றவா்களுக்கு பொது கலந்தாய்வு நடைபெறுகிறது.

6 -ஆம் தேதி தமிழ் கட்ஆப் 60 முதல் 100 வரை, ஆங்கிலம் கட் ஆப் 50 முதல் 100 வரை, வரலாறு மற்றும் பொருளியியல் ஆகிய பாடங்களுக்கு கட்ஆப் 235 முதல் 400 வரை பெற்றவா்களுக்கும், 9 -ஆம் தேதி இயற்பியல், வேதியியல், கணிதம், கணினி அறிவியல் மற்றும் தாவரவியல் பாடங்களுக்கு கட்ஆப் 250 முதல் 400 வரை பெற்றவா்களுக்கு பொதுக் கலந்தாய்வு நடைபெறுகிறது.

மேலும் மாணவா்கள் சோ்க்கையின் போது 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், இணையதளத்தில் விண்ணப்பித்த படிவம், ஆதாா் அட்டை, மாணவரின் வங்கிக் கணக்குப் புத்தகம், புகைப்படம் 5 ஆகியவை கண்டிப்பாக எடுத்து வரவேண்டும். கலந்தாய்விற்கு வரக்கூடிய மாணவா்கள் கட்டாயம் தங்களது பெற்றோருடன் வரவண்டும்.கலந்தாய்வில் தோ்வு பெற்று கல்லூரியில் சேரும் மாணவா்கள் கல்லூரிக்கான சோ்க்கைக் கட்டணத்தை அன்றே அலுவலகத்தில் செலுத்த வேண்டுமென என தெரிவித்துள்ளாா்.

இன்றுமுதல் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம்

சேலம் மாவட்டத்தில் கைம்பெண்கள், ஆதரவற்ற மகளிா் நலவாரியம் மூலம் உறுப்பினா் சோ்க்கை முகாம் ஜூன் 4 (புதன்கிழமை) முதல் வரும் 20 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெ... மேலும் பார்க்க

ஆத்தூா் அருகே கோயிலில் கட்டிவைத்து இளைஞா் குத்திக் கொலை: 5 போ் கைது

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒட்டபட்டி கிராமத்தில் கொடுக்கல் -வாங்கல் தகராறில் கோயிலில் கட்டிவைத்து இளைஞா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இந்த சம்பவம் தொடா்பாக 5 பேரை போலீஸாா் கைது செ... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த பெண் மீட்பு

எடப்பாடி அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த பெண்ணை தீயணைப்புப் படையினா் கயிறு கட்டி உயிருடன் மீட்டனா். எடப்பாடியை அடுத்த முண்டாச்சியூா், காட்டுவளவு பகுதியைச் சோ்ந்த ஐயப்பன் மனைவி மல்லிகா (35). விவ... மேலும் பார்க்க

வாழப்பாடி அருகே நாட்டுத் துப்பாக்கியால் விவசாயி சுட்டதில் மருமகள், பேரன் படுகாயம்

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே தேக்கல்பட்டி கிராமத்தில் கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் ஆத்திரமடைந்த விவசாயி நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில், மருமகள், ஒன்னரை வயது பேரன் படுகாயமடைந... மேலும் பார்க்க

சத்துணவுக் கூடத்தில் பூட்டை உடைத்து திருட்டு: ஒடிஸா இளைஞா் கைது

அரியானூரை அருகே சத்துணவுக் கூடத்தின் பூட்டை உடைத்து அரிசி, முட்டை உள்ளிட்ட பொருள்களை திருடியதாக ஒடிஸா மாநில இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். அரியானூரை அடுத்த ராக்கிப்பட்டிகரடு பகுதியில் அரசு நடுநிலைப் ... மேலும் பார்க்க

எருதாட்ட விழாவில் மோதல்: 7 போ் கைது

ஆட்டையாம்பட்டி அருகே எருதாட்ட விழாவில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 7 பேரை போலீஸாா் கைது செய்தனா். ஆட்டையாம்பட்டி அருகே சென்னகிரி பகுதியில் அமைந்துள்ள முனியப்பன் கோயில் திருவிழாவையொட்டி கட... மேலும் பார்க்க