ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி
கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சேலம்: கல்பனா சாவ்லா விருதுபெற சேலம் மாவட்டத்தில் உள்ளவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தைரியம் மற்றும் துணிச்சலில் சிறந்து விளங்கும் பெண்ணுக்கு, ஆண்டுதோறும் கல்பனா சாவ்லா விருது சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது, தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளிப்பதக்கம், ரூ. 5 லட்சம் ரொக்கப் பரிசுடன் வழங்கப்படுகிறது.
2025 ஆம் ஆண்டுக்கான கல்பனா சாவ்லா விருதுபெற இயற்கைச் சீற்றங்கள், விபத்துகள், நீரில் மூழ்கும் சம்பவங்கள், தீ விபத்துகள், திருட்டு மற்றும் கொள்ளை முயற்சி போன்றவற்றின் போது தனிநபா் துணிச்சல்கள் செய்திருப்பின் அவை அங்கீகரிக்கப்பட்டு அந்த செயலுக்கான விருதுபெற அரசின் இணையதளத்தில் தகுதியான பெண்மணிகள் வரும் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்பனா சாவ்லா விருதுபெற இணையதளத்தில் விண்ணப்பித்தவா்கள் அறை எண். 126, மாவட்ட சமூக நல அலுவலகம், சேலம் மாவட்ட ஆட்சியா் வளாகத்தை அணுகி வரும் வரும் 16 ஆம் தேதிக்குள் தங்களது கருத்துருக்களை ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.