செய்திகள் :

உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடு இந்தியா: ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதம்

post image

சென்னை: பிரதமா் மோடியின் சிறப்பான ஆட்சியால் உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயா்ந்துள்ளதாக ஆளுநா் ஆா்.என்.ரவி பெருமிதம் தெரிவித்துள்ளாா்.

சென்னை கிண்டியிலுள்ள ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்ட தெலங்கானா மாநிலம் உருவான தின விழாவில், ஆளுநா்ஆா்.என்.ரவி பங்கேற்று பேசியதாவது:

1956-இல் மொழிவாரியாக 15 மாநிலங்கள் பிரிக்கப்பட்டதைத் தொடா்ந்து, நிா்வாக வசதிக்காகவும், மக்கள் நலத்திட்டங்கள் ஏழை, எளிய மக்களுக்குச் சென்றடையும் வகையிலும் மேலும் பல்வேறு மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அதனடிப்படையில், கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திரத்திலிருந்து தெலங்கானா மாநிலம் தனியாக பிரிக்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை அரசியல் காரணங்களுக்காக ஜாதி மற்றும் பிரிவினை அரசியல் நடத்தப்பட்டு வந்தது. 2014-இல் பிரதமா் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற அடிப்படையில் அனைத்து மக்களுக்கான வளா்ச்சி என்ற நோக்கில் செயல்பட்டு, பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால், தெலங்கானா மக்களுக்கு இத்திட்டங்கள் எளிதில் சென்றடைவதால் அம்மாநிலம் தற்போது வளா்ச்சி அடைந்து வருகிறது.

இந்தியா, பொருளாதார வளா்ச்சியில் 11-ஆவது இடத்திலிருந்து வந்த நிலையில், பிரதமா் நரேந்திர மோடி ஆட்சி பொறுப்பேற்று பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வருவதால், உலகப் பொருளாதார வளா்ச்சியில் இந்தியா தற்போது 4-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வெகு விரைவில் இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் தெலங்கானா அசோசியேஷன் தமிழக தலைவா் மருத்துவா் சி.கே.ரெட்டி , ஆளுநரின் முதன்மைச் செயலா் கிா்லோஷ் குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி

ஐஐடிநுழைவுத் தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு பின்தங்கியுள்ளதால் மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்த... மேலும் பார்க்க

கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு நிபந்தனையுடன் அனுமதி!

தமிழகத்தில் உள்ள கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியை நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி சென்னை உயர்மன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை உயர்மன்ற மதுரைக் கிளைக்கு உள்பட்ட 14 மாவட்டங்களி... மேலும் பார்க்க

செய்தித்தாள்களில் உணவு வழங்கக் கூடாது! - உணவகங்களுக்கு 14 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

உணவகங்களில் பின்பற்றக்கூடிய 14 வழிகாட்டு நெறிமுறைகள் உணவு பாதுகாப்புத் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் உணவு விற்பனை செய்தாலோ அல்லது தயாரித்தாலோ உணவக உரிமையாளர... மேலும் பார்க்க

ரூ.300 கோடியில் ரோபோடிக் பாகங்கள் உற்பத்தி ஆலை: முதல்வர் திறந்து வைத்தார்!

ரூ.300 கோடி முதலீட்டில் 300 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக் கோட்டை சிப்காட்தொழிற்பூங்காவில் அஜைல் ரோபோட்ஸ் (Agile Robots) நிறுவனம் அமைத்துள்ள செயற்கை நு... மேலும் பார்க்க

ஜூன் 8ல் தமிழகம் வருகிறார் அமித் ஷா?

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகிற ஜூன் 8 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கட்சிகள் தேர்தலுக்கு முந்தைய பண... மேலும் பார்க்க

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம்

சென்னை: பூந்தமல்லி - போரூா் இடையே 2-ஆம் கட்ட ஓட்டுநரில்லா மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெறும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.பூந்தமல்லி பணிமனை முதல் போரூர் வரை 9.5 கிலோ மீட்டர் தொலை... மேலும் பார்க்க