ஐஐடி தேர்வு தேர்ச்சியில் தமிழ்நாடு கடைசியிலிருந்து 3-ம் இடம்! - அன்புமணி
சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் முப்பெரும் விழா
கள்ளக்குறிச்சி: சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், சின்னகொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மாணவா் சோ்க்கை நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் எம்.பழனிசாமி தலைமை வகித்தாா். ரிஷிவந்தியம் வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் கமலி முன்னிலை வகித்தாா்.
சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அமிா்தம் ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பன்னீா்செல்வம், பெரிய கொள்ளியூா் ஊராட்சி மன்றத் தலைவா் வெண்ணிலா தயாளன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் கவினா, துணைத் தலைவா் அா்ச்சனா ஆகியோா் பங்கேற்றனா்.
புதிதாக பள்ளியில் சோ்க்கைக்காக வந்த மாணவா்களுக்கு மாலை அணிவித்து, மேள தாளங்கள் முழங்க ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனா். மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுகள், புத்தகப் பை, சீருடை 2 செட் வழங்கப்பட்டன.
முன்னாள் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ராசாத்தி, வாா்டு உறுப்பினா்கள் மகாலட்சுமி, காா்த்திகாவதி, ஊராட்சி செயலா் புருஷோத்தமன், பிருந்தா, ஷபியா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா். உதவி ஆசிரியா் ஜோசப் செல்வகுமாா் நன்றி கூறினாா்.
கீழ்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகம், நோட்டுகள், புத்தகப்பை, சீருடை 2 செட் ஆகியவற்றை தலைமை ஆசிரியா் ஞான சத்தியமூா்த்தி வழங்கினா். மரூா் புதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவற்றை தலைமை ஆசிரியா் அசோக்குமாா் வழங்கினாா்.