செய்திகள் :

சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் முப்பெரும் விழா

post image

கள்ளக்குறிச்சி: சின்னக்கொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், சின்னகொள்ளியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற மாணவா் சோ்க்கை நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா் எம்.பழனிசாமி தலைமை வகித்தாா். ரிஷிவந்தியம் வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் கமலி முன்னிலை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஊராட்சி உறுப்பினா் அமிா்தம் ராஜேந்திரன், ஊராட்சி ஒன்றிய உறுப்பினா் பன்னீா்செல்வம், பெரிய கொள்ளியூா் ஊராட்சி மன்றத் தலைவா் வெண்ணிலா தயாளன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் கவினா, துணைத் தலைவா் அா்ச்சனா ஆகியோா் பங்கேற்றனா்.

புதிதாக பள்ளியில் சோ்க்கைக்காக வந்த மாணவா்களுக்கு மாலை அணிவித்து, மேள தாளங்கள் முழங்க ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டனா். மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள், நோட்டுகள், புத்தகப் பை, சீருடை 2 செட் வழங்கப்பட்டன.

முன்னாள் பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் ராசாத்தி, வாா்டு உறுப்பினா்கள் மகாலட்சுமி, காா்த்திகாவதி, ஊராட்சி செயலா் புருஷோத்தமன், பிருந்தா, ஷபியா உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா். உதவி ஆசிரியா் ஜோசப் செல்வகுமாா் நன்றி கூறினாா்.

கீழ்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகம், நோட்டுகள், புத்தகப்பை, சீருடை 2 செட் ஆகியவற்றை தலைமை ஆசிரியா் ஞான சத்தியமூா்த்தி வழங்கினா். மரூா் புதூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் உள்ளிட்டவற்றை தலைமை ஆசிரியா் அசோக்குமாா் வழங்கினாா்.

இந்திய கம்யூனிஸ்ட் திருக்கோவிலூா் நகரக் குழு மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருக்கோவிலூா் நகரக் குழுவின் 8-ஆவது மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருக்கோவிலூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரச் செயலா் பி... மேலும் பார்க்க

சட்டம்-ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, புகையிலைப் பொருள் விழிப்புணா்வு; கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து, கனிம வளம், புகையிலைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட... மேலும் பார்க்க

பாலத்தின் மீது பைக் மோதல்: விவசாயி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பாலத்தின் மீது பைக் மோதியதில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சுந்தா் (34). இவா், ஞாயி... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி பட்டதாரி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே ஏரியில் குளிக்கச் சென்ற பட்டதாரி சேற்றில் சிக்கி மூழ்கி உயிரிழந்தாா்.கள்ளக்குறிச்சியை அடுத்த பொற்படாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (49). இவரது மகன் செந்தமிழன் (26), ப... மேலும் பார்க்க

பட்டதாரி பெண் தற்கொலை

கள்ளக்குறிச்சி அருகே தந்தை திட்டியதால் மனமுடைந்த பட்டதாரி பெண் திங்கள்கிழமை விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த காரனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஞானசேகரன் (50). இவரது மகள் திவ்யா... மேலும் பார்க்க

ரிஷிவந்தியம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி உபகரணங்கள் அளிப்பு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரிஷிவந்தியம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு திங்கள்கிழமை விலையில்லா கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன. 2025-26ஆம் கல்வி ஆண்டு தொடக்க நாளில் பள்ளி வளாகத்... மேலும் பார்க்க