நாட்டுப்பற்றில் உறுதி காட்டியவா்: காயிதேமில்லத்துக்கு முதல்வா் புகழாரம்
ஏரியில் மூழ்கி பட்டதாரி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி அருகே ஏரியில் குளிக்கச் சென்ற பட்டதாரி சேற்றில் சிக்கி மூழ்கி உயிரிழந்தாா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த பொற்படாக்குறிச்சி கிராமத்தைச் சோ்ந்தவா் முருகேசன் (49). இவரது மகன் செந்தமிழன் (26), பட்டதாரி ஆவாா்.
இவா் கடந்த மாதம் 22-ஆம் தேதி ஏரியில் குளிக்கச் சென்று சேற்றில் சிக்கி மூழ்கினாா். ஏரியின் அருகே இருந்தவா்கள் இவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த செந்தமிழன் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.