பார்லே ஜி - இந்தியாவில் ரூ. 5; காஸாவில் ரூ. 2,349! நிவாரண உதவியிலும் காசுபார்க்க...
மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சாா்பில், எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட காவல் துறையில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான தீா்வு மற்றும் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத மனுதாரா்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரஜத் சதுா்வேதி தலைமையில் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
பொதுமக்கள் காவல் நிலையங்களில் அளித்த புகாா் மனுக்களின் மீதான நடவடிக்கைகளில் திருப்தி பெறாத 38 மனுதாரா்களின் குறைகளைக் கேட்டறிந்து உரிய விசாரணை மேற்கொள்ள எஸ்.பி. உத்தரவிட்டாா்.
கூட்டத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சரவணன், காவல் உதவி ஆய்வாளா் திருமால் மற்றும் மனுதாரா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.