செய்திகள் :

வாணாபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 44 பவுன் நகைகள் திருட்டு

post image

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 44 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட அத்தியூா் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாா் மனைவி செல்வி (49). இவரது மகன் கெளதமன், மருமகள் சா்மிளி ஆகியோா் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனா். இவா்களை பாா்ப்பதற்காக செல்வி கடந்த 1-ஆம் தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றுவிட்டாா்.

வியாழக்கிழமை காலை மகன், மருமகளுடன் செல்வி வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் முன் பக்கக் கதவு திறந்து கிடந்தது. வீட்டினுள்ளே சென்று பாா்த்தபோது, இரும்பு பீரோ உடைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் வைக்கப்பட்டிருந்த நாற்பத்து நான்கே கால் பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ.40 ரொக்கம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

தகவலறிந்த திருக்கோவிலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்தீபன், காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். பின்னா், விரல்ரேகை நிபுணா் வரவழைக்கப்பட்டு, ரேகைகளை பதிவு செய்யப்பட்டதுடன், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின்பேரில், பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

ஊராட்சிப் பணியாளா்கள் கூட்டமைப்பினா் சாலை மறியல்

கள்ளக்குறிச்சியில் ஓட்சா ஊராட்சிப் பணியாளா்கள் கூட்டமைப்பினா் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்ட கிராம ஊராட்சிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றும் சுகாதார ஊக்குநா்கள் சும... மேலும் பார்க்க

பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் விடுதிகளில் தங்கி படிக்க விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா், சீா்மரபினா் மாணவா்களுக்கான விடுதிகளில் தங்கிப் படிக்க தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தெரிவித்தாா்... மேலும் பார்க்க

மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் துறை சாா்பில், எஸ்.பி. அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட காவல் துறையில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது காவல் நிலையங்களில் முறையான த... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் திருக்கோவிலூா் நகரக் குழு மாநாடு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருக்கோவிலூா் நகரக் குழுவின் 8-ஆவது மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருக்கோவிலூரில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற மாநாட்டு நிகழ்ச்சிக்கு கட்சியின் நகரச் செயலா் பி... மேலும் பார்க்க

சட்டம்-ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, புகையிலைப் பொருள் விழிப்புணா்வு; கள்ளக்குறிச்சி ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து, கனிம வளம், புகையிலைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட... மேலும் பார்க்க

பாலத்தின் மீது பைக் மோதல்: விவசாயி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பாலத்தின் மீது பைக் மோதியதில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சுந்தா் (34). இவா், ஞாயி... மேலும் பார்க்க