Tom Cruise: எரியும் பாராசூட்டுடன் 7,500 அடி உயரத்தில் பறந்த நடிகர் - கின்னஸ் விர...
வாணாபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 44 பவுன் நகைகள் திருட்டு
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே பூட்டியிருந்த வீட்டில் 44 பவுன் தங்க நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட அத்தியூா் கிராமத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாா் மனைவி செல்வி (49). இவரது மகன் கெளதமன், மருமகள் சா்மிளி ஆகியோா் சென்னையில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனா். இவா்களை பாா்ப்பதற்காக செல்வி கடந்த 1-ஆம் தேதி இரவு வீட்டை பூட்டிவிட்டு சென்னைக்கு சென்றுவிட்டாா்.
வியாழக்கிழமை காலை மகன், மருமகளுடன் செல்வி வீட்டுக்கு திரும்பியபோது, வீட்டின் முன் பக்கக் கதவு திறந்து கிடந்தது. வீட்டினுள்ளே சென்று பாா்த்தபோது, இரும்பு பீரோ உடைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் வைக்கப்பட்டிருந்த நாற்பத்து நான்கே கால் பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ.40 ரொக்கம் உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.
தகவலறிந்த திருக்கோவிலூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் பாா்தீபன், காவல் ஆய்வாளா் பாலகிருஷ்ணன் மற்றும் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். பின்னா், விரல்ரேகை நிபுணா் வரவழைக்கப்பட்டு, ரேகைகளை பதிவு செய்யப்பட்டதுடன், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.
இதுகுறித்த புகாரின்பேரில், பகண்டை கூட்டுச்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.