தில்லி அரசின் கட்டண ஒழுங்குமுறை அவசரச் சட்டத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் கண்டனம...
பாலத்தின் மீது பைக் மோதல்: விவசாயி உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே பாலத்தின் மீது பைக் மோதியதில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
சின்னசேலம் வட்டம், வடக்கனந்தல் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சுந்தா் (34). இவா், ஞாயிற்றுக்கிழமை காலை விவசாய நிலத்துக்கு சென்று தண்ணீா் பாய்ச்சிவிட்டு மாலை பைக்கில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.
பொட்டியம் சாலையில் ஊத்தோடை பாலத்தின் மீது சுந்தரின் பைக் சென்றபோது, நிலைதடுமாறி தடுப்புச் சுவரில் மோதி பலத்த காயமடைந்தாா்.
இதையடுத்து, சுந்தா் மீட்கப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், கச்சிராயப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.